சூலூர் அருகே கஞ்சா விற்க முயன்ற ஒடிசா வாலிபர் கைது - 5 கிலோ கஞ்சா பறிமுதல்

கோவை சூலூர் பகுதியில் கஞ்சா விற்க முயன்ற ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த கங்கா பாஹா (வயது 30) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 5 கிலோ எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.



கோவை: கோவை மாவட்டத்தில் போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த கோவை மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக கல்லூரிகள் உள்ள பகுதிகளில் ரோந்து பணிகள் மற்றும் வாகன சோதனைகளை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.

அதன்படி, சூலூர் காவல் ஆய்வாளர் மாதையன் தலைமையிலான தனிப்படை போலீசார் சூலூர் பேருந்து நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை விற்பனை செய்ய முயன்றதாக ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த கங்கா பாஹா (வயது 30) என்பவரை போலீசார் கைது செய்தனர்.



அவரிடமிருந்து 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர், கைதான கங்காவை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், போதை பொருட்கள் விற்பனை செய்வது உட்பட சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்து மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு 9498181212 என்ற செல்போன் எண்ணிற்கு அல்லது 7708100100 என்ற வாட்ஸ்- அப் எண்ணிற்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...