கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை - ஜனவரி 27 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற கொடநாடு வழக்கு விசாரணையில், செல்போன் தகவல் பரிமாற்றங்கள் மற்றும் எலக்ட்ரானிக் ஆதாரங்களை ஆய்வு செய்ய வேண்டியுள்ளதால் அரசு வழக்கறிஞர் அவகாசம் கோரியதால் வழக்கை ஜனவரி 27 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி முருகன் உத்தரவு.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் கொடநாடு பங்களாவில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி இரவு கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது. அப்போது அங்கு காவலாளியாக இருந்த ஓம் பகதூர் என்பவர் கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ், கேரளாவை சேர்ந்த சயான், வாளையார் மனோஜ் உள்ளிட்ட 11 பேர் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. இந்நிலையில், முதல் குற்றவாளியான கனகராஜ் சேலம் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தார்.

இதையடுத்து சயான் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு தற்போது அனைவரும் ஜாமினில் உள்ள நிலையில், கடந்த 5 ஆண்டு காலமாக இந்த வழக்கு உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆகியோர் ஆஜராகினர்.



மேலும் சிபிசிஐடி போலீசார் தரப்பில் விசாரணை அதிகாரி முருகவேல் தலைமையிலான போலீசார், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோர் மட்டுமே ஆஜராகினர்.

வழக்கு விசாரணையின் போது ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான் வாதத்தில் தெரிவித்ததாவது, தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையின் போது கைப்பற்றிய 720 செல்போன் தகவல் பரிமாற்றங்களின் உண்மை தன்மை குறித்து சிபிசிஐடி போலீசார் ஆய்வு செய்யும் பணியை தொடங்கி உள்ளது. தனிப்படை போலீசார் ஒப்படைத்துள்ள ஆவணங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் எலக்ட்ரானிக் ஆதாரங்களை ஆய்வு செய்ய துறையில் உள்ள திறமையான அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. புலன் விசாரணைக்காகவும், செல்போன் தகவல் பரிமாற்றங்களை ஆய்வு செய்ய வேண்டி உள்ளதால் கால அவகாசம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் வாதிட்டார்.

இந்நிலையில் அவரது கோரிக்கையை ஏற்ற நீதிபதி முருகன் வழக்கு விசாரணையை ஜனவரி 27-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...