கோவை வடவள்ளியில் வீடு புகுந்து கொள்ளை: கார், நகை, பணம் மீட்பு; இருவர் கைது..!

கடந்த 28 ஆம் தேதி வடவள்ளியில் வீடு புகுந்து நகை, பணம், கார் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் இருவரை கைது செய்த போலீசார், 17.25 சவரன் நகைகள், ரூ.1.85 லட்சம் பணம் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.



கோவை: கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (49). அதே பகுதியில் உள்ள மாதவன் நகரில் தனது மனைவி மகேஸ்வரி உடன் பெரியசாமி வசித்து வசித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த நவம்பர் 28 ஆம் தேதி பெரியசாமி வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ளார். அப்போது, வீட்டில் தனியாக இருந்த அவரது மனைவி முன்பக்க கதவை அடைத்து விட்டு குளிப்பதற்காக குளியலறைக்கு சென்றுள்ளார்.

இதனையடுத்து, அவர் மீண்டும் வெளியே வந்து பார்த்தபோது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரை அடையாளம் தெரியாத நபர்கள் எடுத்துச் சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

தொடர்ந்து உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த தங்க நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றையும் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து உடனடியாக அவர் தனது கணவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, வீட்டுக்கு வந்த கணவரிடம் நடந்ததை மகேஸ்வரி கூறியதை அடுத்து, கொள்ளைச் சம்பவம் குறித்து பெரியசாமி வடவள்ளி காவல் நிலையத்துக்கு சென்று புகார் அளித்தார்.

அவர் அளித்த புகாரின் அடிப்படையில், காவல் ஆய்வாளர் லெனின் அப்பாதுரை வழக்குப்பதிவு செய்து வழக்கை விசாரித்து வந்தார். தொடர்ந்து, அவர்களது வீட்டில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது, வடவள்ளி பகுதியைச் சேர்ந்த அரவிந்த் (23) மற்றும் மதுரை மாவட்டத்தைச் முத்துசுருளி (35) என்பது தெரியவந்தது

இதனையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், வீடு புகுந்து கொள்ளை அடித்த 17.25 சவரன் தங்க நகைகள், ரூ.1,85,000 ரொக்கம் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.

இக்கொள்ள சம்பவத்தை அடுத்து, வீட்டில் தனியாக இருப்பவர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தின் தொலைபேசி எண்கள் மற்றும் காவல் கட்டுப்பாட்டு அறையின் எண் போன்ற எண்களை தவறாது வைத்திருக்க வேண்டும் என்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...