நீலகிரி முதுமலையில் புலி தாக்கி வேட்டை தடுப்பு காவலர் படுகாயம் - அச்சத்தில் பொதுமக்கள்..!

முதுமலை வனச்சரக வேட்டை தடுப்பு காவலர் பொம்மனை புலி தாக்கிய நிலையில், உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன்பு அந்த புலியை உடனடியாக கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்குள் உள்ள தெப்பக்காடு பகுதியை சேர்ந்தவர் பொம்மன்(33). இவர் முதுமலை வனச்சரகத்தில் வேட்டை தடுப்பு காவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவர் விடுமுறையில் இன்று தெப்பகாடு லைட் பாடியில் உள்ள தனது வீட்டுக்கு சென்றுள்ளார்.

பின்னர் இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டின் பின்புறம் சென்ற போது குடியிருப்பை ஓட்டி புதரில் பதுங்கி இருந்த புலி அவரை தாக்கியுள்ளது.



இதில் தலை, முதுகு மற்றும் இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் பொம்மன் புலியை தைரியமாக எதிர்த்து நின்று சண்டையிட்டதால் உயிர் தப்பியதாக கூறப்படுகிறது.



இதையடுத்து சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பொம்மனை தாக்கிய புலி வயதான புலி என்றும் கடந்த சில நாட்களாக தெப்பக்காடு பகுதியில் சுற்றித்திரிந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக உயிரிழப்பு ஏற்படும் முன்பு உடனடியாக அந்த புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதியில் உள்ள பழங்குடியின மக்கள், வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...