கோவை பெரியநாயக்கன் பாளையம் ஒன்றிய கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஆலோசனை கூட்டம் - முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை..!

கோவை மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பெரியநாயக்கன் பாளையம் ஒன்றிய அளவிலான கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஆலோசனை கூட்டத்தில், கட்சியின் அடுத்தக்கட்ட நகர்வுகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.


கோவை: கோவை மேற்குபெரியநாயக்கன் பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்டகொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

பன்னீர்மடை பகுதியில் உள்ள ஸ்ரீ கருணாம்பிகை கோயில் மண்டபத்தில் கடந்த 27 ஆம் தேதி மாலை 06.30 மணியளவில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், கொங்கு வேளாளர் கவுண்டர் பேரவை பொருளாளர் சண்முகக் கவுண்டர் மற்றும் முன்னாள் பொருளாளர் முருகேச கவுண்டர் ஆகியோர் தலைமைதாங்கினர்.



இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் M.S.மணி மற்றும் மாவட்ட மகளிர் அணி செயலாளர் கவிதா மற்றும் ஒன்றிய செயலாளர் தங்கவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஒன்றிய பொறுப்பாளர்கள் தங்கவேல், P.M.இங்கோவன், ஜெகநாதன், மாணிக்க வாசகம் மற்றும் பன்னீர்மடை ஊராட்சி செயலாளர் சிவஞானம் ஆகியோர் கலந்து கொண்டனர்.



இந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் அடுத்த கட்ட வளர்ச்சிப் பணிகள், விரைவில் நடைபெற இருக்கும் கொடியேற்று விழா உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.

இதில் ஒன்றிய துணை செயலாளர் பொன்னுசாமி இறுதியாக நன்றியுரை கூறினார். மேலும் மாவட்ட, ஒன்றிய, நகர , பன்னீர்மடை ஊராட்சி பொறுப்பாளர்கள் மற்றும் மகளிர் அணி, தீரன் படை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பலரும்ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.





Newsletter

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...