கோவை பெரியநாயக்கன் பாளையம் ஒன்றிய கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஆலோசனை கூட்டம் - முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை..!

கோவை மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பெரியநாயக்கன் பாளையம் ஒன்றிய அளவிலான கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஆலோசனை கூட்டத்தில், கட்சியின் அடுத்தக்கட்ட நகர்வுகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.


கோவை: கோவை மேற்குபெரியநாயக்கன் பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்டகொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

பன்னீர்மடை பகுதியில் உள்ள ஸ்ரீ கருணாம்பிகை கோயில் மண்டபத்தில் கடந்த 27 ஆம் தேதி மாலை 06.30 மணியளவில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், கொங்கு வேளாளர் கவுண்டர் பேரவை பொருளாளர் சண்முகக் கவுண்டர் மற்றும் முன்னாள் பொருளாளர் முருகேச கவுண்டர் ஆகியோர் தலைமைதாங்கினர்.



இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் M.S.மணி மற்றும் மாவட்ட மகளிர் அணி செயலாளர் கவிதா மற்றும் ஒன்றிய செயலாளர் தங்கவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஒன்றிய பொறுப்பாளர்கள் தங்கவேல், P.M.இங்கோவன், ஜெகநாதன், மாணிக்க வாசகம் மற்றும் பன்னீர்மடை ஊராட்சி செயலாளர் சிவஞானம் ஆகியோர் கலந்து கொண்டனர்.



இந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் அடுத்த கட்ட வளர்ச்சிப் பணிகள், விரைவில் நடைபெற இருக்கும் கொடியேற்று விழா உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.

இதில் ஒன்றிய துணை செயலாளர் பொன்னுசாமி இறுதியாக நன்றியுரை கூறினார். மேலும் மாவட்ட, ஒன்றிய, நகர , பன்னீர்மடை ஊராட்சி பொறுப்பாளர்கள் மற்றும் மகளிர் அணி, தீரன் படை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பலரும்ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.





Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...