சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா தலைமையில் கோவையில் பல்வேறு இடங்களில் ஆய்வு

மாவட்ட ஆட்சியர் சமீரன் முன்னிலையில் உக்கடம் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், பச்சாபாளையம் சிறுவாணி சாலையில் உள்ள ஆவின் நிறுவனம், புதிய துணை மின்நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.



கோவை: தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா தலைமையில், மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்சமீரன் முன்னிலையில் இக்குழுவின் உறுப்பினர்கள் ஹோப் காலேஜ் தொழில்நுட்ப பூங்கா, சவரிபாளையம்பிரிவு அத்வைத் நூற்பாலை, உக்கடம் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், பொள்ளாச்சி சாலை சிட்கோ, தமிழ்நாடு பஞ்சாலை கழகம், கிணத்துக்கடவு, கொண்டம்பட்டி, காற்றாலை நிலையத்தில் ஆய்வு செய்தனர்.



மேலும் பச்சாபாளையம் சிறுவாணி சாலையில் உள்ள ஆவின் நிறுவனம், புதிய துணை மின்நிலையம் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.



மேலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சுங்கம் பணிமனையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.



தொடர்ந்து அக்குழுவினர் பணிமனையில் பேருந்துகள் தூய்மை செய்யப்படுவதை பார்வையிட்டனர். சுகாதாரமாக பொதுமக்களின் பயன்பாட்டுக்கு செல்கிறதா என்பதை ஆய்வு செய்தனர்.



பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பொது நிறுவனங்கள் குழுவின் தலைவர் ராஜா பேசியதாவது: இந்தியாவில் எங்கும் இல்லாத அளவிற்கு பெண்களுக்கு இலவச பேருந்துகளை அரசு இயக்கி வருவதாக கூறினார்.

அரசின் நோக்கம் அரசு பேருந்துகளை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என்பது தான் என கூறிய அவர், பெண்களுக்கான இலவச பேருந்துகள் திட்டத்தில் அரசு பெயரை கெடுக்க சிலர் முயற்சி செய்வதாகவும் குற்றம்சாட்டினார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...