கோவையில் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பட்டம்

கோவையில் இனாமாக கொடுக்கப்பட்ட நிலங்களை இந்து சமய அறநிலையத்துறை கையகப்படுத்துவதாக கூறி, அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் சொத்துக்கள் விவசாயிகளுக்கு இனாமாக கொடுக்கப்பட்ட நிலையில் அதற்கான உரிமை பட்டா வழங்கப்பட்டது. இதனிடையே இந்து சமய அறநிலையத்துறை இனாமாக கொடுக்கப்பட்ட நிலங்களை கையகப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.



இதனை கண்டித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் மற்றும் இனாம் விவசாயிகள் இயக்கத்தினர் கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



தமிழக அரசு கடந்த 1963-ஆம் ஆண்டு இனாம் ஒழிப்புச் சட்டம் கொண்டு வந்து நிலத்தை உழுது கொண்டிருந்த உழவர்களுக்கு உரிமை பட்டா வழங்கியுள்ளதாகவும் ஆனால் அதிகாரிகள் இந்த நிலத்தை கையகப்படுத்த முயற்சிப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.



நில உரிமை படைத்த உழவர்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று சொல்லி சட்டவிரோதமாக அறிவிப்புகளை அனுப்பி, உழவர்களின் நிலங்களை ஆக்கிரமிக்க அறநிலையத்துறை முயற்சி செய்து வருவதாகவும் இதனை உடனடியாக கைவிட வேண்டும் என்றும் விவசாயிகள் கூறியுள்ளனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...