கோவையில் நடிகர் விஜய் சேதுபதியின் சேவை இயக்கம் சார்பில் டிச.2,3,4 தேதிகளில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்

கோவையில் நடிகர் விஜய் சேதுபதி சார்பில் வரும் டிசம்பர் 2,3,4 ஆகிய தேதிகளில் இளைஞர்களின் வாழ்வை மேம்படுத்தும் வகையில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



கோவை: நடிகர் விஜய் சேதுபதியின் வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கம் மற்றும் KGISL கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்தும் மூன்று நாட்கள் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் வரும் டிசம்பர் 2,3,4 ஆகிய தேதிகளில் கோவை மாநகரில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

இந்த வேலை வாய்ப்பு முகாமில் 22 துறைகளை சேர்ந்த, 200-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்துகொள்கின்றன. 20 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை கிடைக்க உதவுவதே இந்த வேலை வாய்ப்பு முகாமின் நோக்கமாக உள்ளது.

வேலை வாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விரும்பும் இளைஞர்கள் http://jobfair.vvvsi.com எனும் இணையத்தளத்தில் பதிவு செய்து வேலை வாய்ப்பை பெற்று பயன்பெறலாம் என்றும்எந்த கட்டணமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த முறை நடிகர் விஜய் சேதுபதியின் வள்ளலார் வேலைவாய்ப்பு சேவை இயக்கம் சார்பில்புதுச்சேரியில் நடைபெற்ற மாபெரும் வேலை வாய்ப்பு முகாமில் 50 நிறுவனங்கள் பங்கேற்றதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

இதுவரை நடிகர் விஜய் சேதுபதியின் சேவை இயக்கம் மூலம் 1 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் பயனடைந்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.



Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...