தடையை மீறி கழிவுநீர் தொட்டிகளை சுத்தம்‌ செய்ய மனிதர்களை பயன்படுத்தினால் நடவடிக்கை - கோவை மாநகராட்சி ஆணையாளர்‌ எச்சரிக்கை

கோவையில் தடையை மீறி கழிவுநீர் தொட்டிகளை சுத்தம்‌ செய்யும் பணிகளில் மனிதர்களை பயன்படுத்தினால் அபராதம்‌ விதிக்கப்படுவதுடன் சிறைதண்டனை அனுபவிக்க நேரிடும் என்று மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.



கோவை: கோவை மாநகராட்சி பகுதிகளில்‌ மனிதக்‌ கழிவுகளை மனிதனே அகற்றும்‌ தடைச்சட்டம்‌ 2013-ன்‌ படி, பாதாள சாக்கடைகள்‌ மற்றும்‌ கழிவுநீர் தொட்டிகளை சுத்தம்‌ செய்ய மனிதர்களை ஈடுபடுத்திட முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளை மேற்கொள்ள கோவை மாநகராட்சி சார்பில்‌ போதுமான கழிவுநீர் உறிஞ்சி வாகனங்கள்‌ மற்றும்‌ இயந்திரங்கள்‌ பயன்பாட்டில்‌ உள்ளன.

எனவே மாநகராட்சி பகுதிகளில்‌ அமைந்துள்ள மத்திய,மாநில அரசு நிறுவனங்கள்‌, பொதுத்துறை நிறுவனங்கள்‌, தனியார்‌ நிறுவனங்கள்‌, வர்த்தக நிறுவனங்கள்‌, மால்கள்‌, இதர நிறுவனங்கள்‌, பள்ளிகள்‌, கல்லூரிகள்‌, கடைகள்‌, அடுக்குமாடி குடியிருப்புகள்‌ மற்றும்‌ குடியிருப்பு பகுதிகளில்‌ அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் தொட்டிகளை சுத்தம்‌ செய்யும்‌ பணிகளில்‌ மனிதர்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபடுத்தக்‌ கூடாது என மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இத்தடை சட்டத்தை மீறி எவரேனும்‌ செயல்படும்‌ பட்சத்தில்‌ உரிய சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன்‌ அபராதம்‌ மற்றும்‌ சிறைதண்டனை விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும்‌, இச்செயலால்‌ ஏதேனும்‌ உயிரிழப்புகள்‌ ஏற்படும்‌ பட்சத்தில்‌ உச்சந்திமன்ற உத்தரவின்படி பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபர்களின்‌ குடும்பத்தினருக்கும்‌ தலா 15 லட்சம் ரூபாய்க்கு குறையாமல்‌ இழப்பீடு வழங்குவது சம்மந்தப்பட்டவரையே சாரும்‌ என்றும் மாரகராட்சி ஆணையாளர் பிரதாப் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

மூலப்பொருள் விலை உயர்வால் 'ஜாப் ஒர்க்' நிறுவனங்கள் இயந்திர கட்டணம் உயர்த்த 'டாக்ட்', 'காட்மா' தொழில் அமைப்பினர் முடிவு

கோவையில் மூலப்பொருட்கள் விலை உயர்வால் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், Job Work நிறுவனங்கள் CNC,...

வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஆசையில் சிக்கும் இளைஞர்கள்: கோவை போலீசார் எச்சரிக்கை

கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கம்போடியாவில் சைபர் மோசடி கும்பலிடம் சிக்கி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, தென்கிழக்கு ஆச...

கிணத்துக்கடவு தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் வேட்பு மனு தாக்கல்

கிணத்துக்கடவு தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னாள் எம்.எல்.ஏ எட்டிமடை சண்முக...

கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் PRG அருண்குமார் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் PRG அருண்குமார் இன...

ஆனைமலையில் வால்பாறை தொகுதிக்கான தேர்தல் வியூக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

ஆனைமலையில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் வால்பாறை சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மதச்சார்பற்ற முற்...

கோவை - ஷார்ஜா இடையே 16 நாட்களில் 5000 பேர் பயணம், 50 டன் சரக்குகள் ஏற்றுமதி

மார்ச் மாதத்தில் கோவை-ஷார்ஜா இடையே 16 நாட்களில் ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் விமான சேவைகள் வழங்கப்பட்டன. 4,880 பேர் பயண...