தடையை மீறி கழிவுநீர் தொட்டிகளை சுத்தம்‌ செய்ய மனிதர்களை பயன்படுத்தினால் நடவடிக்கை - கோவை மாநகராட்சி ஆணையாளர்‌ எச்சரிக்கை

கோவையில் தடையை மீறி கழிவுநீர் தொட்டிகளை சுத்தம்‌ செய்யும் பணிகளில் மனிதர்களை பயன்படுத்தினால் அபராதம்‌ விதிக்கப்படுவதுடன் சிறைதண்டனை அனுபவிக்க நேரிடும் என்று மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.



கோவை: கோவை மாநகராட்சி பகுதிகளில்‌ மனிதக்‌ கழிவுகளை மனிதனே அகற்றும்‌ தடைச்சட்டம்‌ 2013-ன்‌ படி, பாதாள சாக்கடைகள்‌ மற்றும்‌ கழிவுநீர் தொட்டிகளை சுத்தம்‌ செய்ய மனிதர்களை ஈடுபடுத்திட முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளை மேற்கொள்ள கோவை மாநகராட்சி சார்பில்‌ போதுமான கழிவுநீர் உறிஞ்சி வாகனங்கள்‌ மற்றும்‌ இயந்திரங்கள்‌ பயன்பாட்டில்‌ உள்ளன.

எனவே மாநகராட்சி பகுதிகளில்‌ அமைந்துள்ள மத்திய,மாநில அரசு நிறுவனங்கள்‌, பொதுத்துறை நிறுவனங்கள்‌, தனியார்‌ நிறுவனங்கள்‌, வர்த்தக நிறுவனங்கள்‌, மால்கள்‌, இதர நிறுவனங்கள்‌, பள்ளிகள்‌, கல்லூரிகள்‌, கடைகள்‌, அடுக்குமாடி குடியிருப்புகள்‌ மற்றும்‌ குடியிருப்பு பகுதிகளில்‌ அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் தொட்டிகளை சுத்தம்‌ செய்யும்‌ பணிகளில்‌ மனிதர்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபடுத்தக்‌ கூடாது என மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இத்தடை சட்டத்தை மீறி எவரேனும்‌ செயல்படும்‌ பட்சத்தில்‌ உரிய சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன்‌ அபராதம்‌ மற்றும்‌ சிறைதண்டனை விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும்‌, இச்செயலால்‌ ஏதேனும்‌ உயிரிழப்புகள்‌ ஏற்படும்‌ பட்சத்தில்‌ உச்சந்திமன்ற உத்தரவின்படி பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபர்களின்‌ குடும்பத்தினருக்கும்‌ தலா 15 லட்சம் ரூபாய்க்கு குறையாமல்‌ இழப்பீடு வழங்குவது சம்மந்தப்பட்டவரையே சாரும்‌ என்றும் மாரகராட்சி ஆணையாளர் பிரதாப் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...

மேட்டுப்பாளையம் தொகுதி அதிருப்திக்குப் பிறகு ராஜினாமா: திமுக T R சண்முகசுந்தரம் தனியாக போட்டி?

குடும்ப சூழ்நிலை மற்றும் பணி சுமை காரணமாக திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் TR சண்முகச...

கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக வேட்பாளர் கனிமொழி வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கனிமொழி, சனிக்கிழமை கோட்டாட்சியர் வ...

கோவை வடக்கில் போட்டியிடும் வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி பதிவு

பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த கட்சித் தலைவர்களுக்கு நன்ற...