வால்பாறை முடீஸ் டவுன் பஜாரில் குடிநீர் விநியோகம் திடீர் நிறுத்தம் - ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் மனு

வால்பாறை முடீஸ் டவுன் பஜாரில் எந்த வித முன்னறிவிப்பின்றி BBTC நிர்வாகம் குடிநீர் விநியோகத்தை நிறுத்தி விட்டதாக கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் புகாரா மனு அளித்துள்ளனர்.



கோவை: வால்பாறை முடீஸ் டவுன் பஜாரை இயக்கி வந்த BBTC நிர்வாகம் அரசாங்கத்திடமிருந்து குத்தகையாக தனியார் சந்தை அனுமதி பெற்று பஜாரை நடத்தி வந்தது. அதன்படி பஜார் வளாகத்திற்கு சுத்தமான குடிநீர் வழங்கப்பட வேண்டும், சந்தையை சுகாதாரமாக வைத்து கொள்ள வேண்டும், சந்தை மக்களுக்கு மின்சாரம் கொடுக்க வேண்டும், வருடத்தின் மொத்த வசூலில் 15% யை வால்பாறை நகரியத்திற்கு செலுத்த வேண்டும் என்ற நடைமுறை இருந்து வந்துள்ளது.



ஆனால் கடந்த சில ஆண்டுகளாக BBTC நிர்வாகம் அதனை பின்பற்றாமல் இருந்து வந்ததாகவும், இது குறித்து வால்பாறை நகராட்சியில் உள்ள அனைத்து அரசு அதிகாரிகளிடம் மனுக்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையை எடுக்க வில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.



இந்நிலையில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி குடிநீர் வழங்கி வந்ததை நிர்வாகம் நிறுத்தி விட்டதாக கூறி அப்பகுதி மக்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

அரசு அதிகாரிகள் தனியார் நிர்வாகத்திற்கு சாதகமாகவே செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டிய பொதுமக்கள், மாவட்ட ஆட்சியர் இந்த விவகாரத்தில் உடனடியாக கவனம் செலுத்தி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...