முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் புலி உள்ளிட்ட ஊன் உண்ணிகள் கணக்கெடுக்கும் பணிகள் இன்று முதல் துவங்கியுள்ள நிலையில் வனப்பகுதியில் 191 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரம்.
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் ஆண்டுதோறும் புலி உள்ளிட்ட ஊன் உண்ணிகளின் கணக்கெடுப்பு பணிகள் நடத்தப்படுவது வழக்கம். இதற்காக வனப்பகுதிக்குள் தானியங்கி கேமராக்கள் பொருத்தப்படும்.
அந்த வகையில் இந்த ஆண்டிற்கான ஊன் உண்ணிகளின் கணக்கெடுப்பு பணிகள் தொடங்கி உள்ளது. இதற்காக முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் 191 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, தலா இரண்டு கேமராக்கள் வீதம் மொத்தம் 382 கேமராக்களை பொருத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இன்று துவங்கியுள்ள இந்த கணக்கெடுப்பு பணிகள் அடுத்த 40 நாட்களுக்கு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
முதுமலை புலிகள் காப்பக உள் மண்டல வனப்பகுதிக்கு உட்பட்ட முதுமலை, தெப்பக்காடு, கார்குடி, நெலாக்கோட்டை, மசினகுடி ஆகிய வனச்சரகங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டிற்கான ஊன் உண்ணிகளின் கணக்கெடுப்பு பணிகள் தொடங்கி உள்ளது. இதற்காக முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் 191 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, தலா இரண்டு கேமராக்கள் வீதம் மொத்தம் 382 கேமராக்களை பொருத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இன்று துவங்கியுள்ள இந்த கணக்கெடுப்பு பணிகள் அடுத்த 40 நாட்களுக்கு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
முதுமலை புலிகள் காப்பக உள் மண்டல வனப்பகுதிக்கு உட்பட்ட முதுமலை, தெப்பக்காடு, கார்குடி, நெலாக்கோட்டை, மசினகுடி ஆகிய வனச்சரகங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.