பல்லடத்தில் ரூ.3 ஆயிரம் லஞ்சம் பெற்ற சமூக நலத்துறை பெண் அலுவலர் கைது

பல்லடத்தில் பெண் குழந்தைகளுக்கான உதவித்தொகை திட்டத்தில் பயன்பெற விண்ணப்பித்தவரிடம் 3 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற சமூக நலத்துறை பெண் அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



திருப்பூர்: திண்டுக்கல் ரெட்டியார்பட்டியை சேர்ந்தவர் பசும்பொன் தேவி. இவர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சமூக நலத்துறை விரிவாக்க அலுவலராக பணியாற்றி வருகிறார்.

இதனிடையே பல்லடம் அடுத்த வருவாய் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் தனது இரு மகள்களுக்காக சமூக நலத்துறை சார்பில் தமிழக அரசால் வழங்கப்படும் பெண் குழந்தைகளுக்கான உதவித்தொகை திட்டத்தில் பயன்பெற வேண்டி பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தி விண்ணப்பித்துள்ளார்.



ஆனால் பணியை செய்வதற்காக அலுவலர் பசும்பொன்தேவி, 3 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கேட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து செந்தில்குமார் லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

லஞ்சப் பணத்தை கூகுல் பே மூலம் அனுப்புமாறு பசும்பொன்தேவி தெரிவிக்க, 1,500 ரூபாயை கூகுல் பே மூலமாகவும், எஞ்சிய தொகையான 1,500 ரூபாயை ரொக்கமாக தருவதாகவும் செந்தில்குமார் கூறியுள்ளார்.



லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுறுத்தலின்படி, பல்லடம் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த பசும்பொன் தேவியிடம் ரசாயனம் தடவிய, 1,500 ரூபாயை செந்தில்குமார் கொடுத்துள்ளார்.



அப்போது அங்கு மறைந்திருந்த போலீசார் பசும்பொன் தேவியை கையும் களவுமாக பிடித்து விசாரணைக்காக பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.

முன்னதாக,செந்தில்குமாரிடம் பசும்பொன் தேவி பேசிய ஆடியோ, மற்றும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. அதில், திட்டத்தில் இணைவதற்கான பத்திர செலவு உள்ளிட்ட வகையில், 3 ஆயிரம் செலவாகும் என்றும் மேற்படி தனக்கு ஏதாவது கொடுங்கள் என, பசும்பொன்தேவி வெளிப்படையாக செந்தில்குமாரிடம் கேட்கும் வீடியோ, மற்றும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...