கோவையில் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டு விற்பனை - ஒருவர் கைது

பெரியநாயக்கன்பாளையத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை தொடர்பான ரோந்து பணியின் போது, பிரஸ்காலனியை சேர்ந்த துரை கணேஷை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகள், பில் புக், ரூ.250 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி டிக்கெட்டுகளை சிலர் விற்பனை செய்து வருவதாக பெரியநாயக்கன் பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதன் அடிப்படையில் பெரியநாயக்கன்பாளையம் இந்திரா வணிக வளாகம் பகுதியில் நேற்றைய தினம் பெரியநாயக்கன்பாளையம் காவல் உதவி ஆவாளர் முரளி ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது, சந்தேகத்தின் பேரில் அங்கு நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்துள்ளார்.

விசாரணையில் அவர் பிரஸ்காலனி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த துரை கணேஷ் என்பதும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கிவந்து திருட்டுத் தனமாக விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், காவல் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும், அவரிடம் இருந்து, 3 கேரள லாட்டரி டிக்கெட்டுகள், பில் புக், 250 ரூபாய் பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...