கோவையில் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டு விற்பனை - ஒருவர் கைது

பெரியநாயக்கன்பாளையத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை தொடர்பான ரோந்து பணியின் போது, பிரஸ்காலனியை சேர்ந்த துரை கணேஷை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகள், பில் புக், ரூ.250 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி டிக்கெட்டுகளை சிலர் விற்பனை செய்து வருவதாக பெரியநாயக்கன் பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதன் அடிப்படையில் பெரியநாயக்கன்பாளையம் இந்திரா வணிக வளாகம் பகுதியில் நேற்றைய தினம் பெரியநாயக்கன்பாளையம் காவல் உதவி ஆவாளர் முரளி ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது, சந்தேகத்தின் பேரில் அங்கு நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்துள்ளார்.

விசாரணையில் அவர் பிரஸ்காலனி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த துரை கணேஷ் என்பதும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கிவந்து திருட்டுத் தனமாக விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், காவல் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும், அவரிடம் இருந்து, 3 கேரள லாட்டரி டிக்கெட்டுகள், பில் புக், 250 ரூபாய் பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...