சட்ட நாளில் கருத்தரங்கு நடத்தும் யுஜிசி முடிவை கண்டித்து கோவையில் திராவிட மாணவர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

சட்ட நாளாக அறிவிக்கப்பட்டுள்ள நவம்பர் 26ஆம் தேதியன்று, கருத்தரங்கு நடத்த முடிவெடுத்துள்ள யுஜிசியை கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திராவிட மாணவர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: நவம்பர் 26ம் தேதி சட்ட நாளாக அறிவிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் மத்திய அரசின் பல்கலைக்கழக மானிய குழுவான யுஜிசி நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் கருத்தரங்கு நடத்த ஏற்பாடு செய்துள்ளது.

"மன்னராட்சியின் மேன்மைகள், ஜனநாயக சிந்தனைகள்" ஆகிய இரு தலைப்புகளின் கீழ் கருத்தரங்கு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் வேதங்கள், மனுஸ்மிருதி, அர்த்த சாஸ்திரம், இதிகாசம், புராணம் ஆகிய நூல்களில் காணப்படும் சிந்தனைகளை கொண்டு இந்த கருத்தரங்கு நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

யுஜிசியின் இந்த கருதரங்கிற்கு பல்வேறு திராவிட கட்சிகள் மற்றும் அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திராவிட மாணவர் கழகம் சார்பில் யுஜிசி யின் இந்த கருத்தரங்கிற்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



திராவிட மாணவர் கழக மாநில துணை செயலாளர் ராகுலன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சுமார் 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு யுஜிசியை கண்டித்து முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...

கோவையில் பருவமழை புகார்களுக்கு சிறப்பு எண்கள்: மாநகராட்சி அறிவிப்பு

மழைநீர் தேக்கம், மரம் விழுதல் உள்ளிட்ட அவசர நிலைகள் தொடர்பாக பொதுமக்கள் 81900 00200 என்ற வாட்ஸ் ஆப் எண் மற்றும் மண்டல வா...

தென்மேற்கு பருவமழை: கோவையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்

தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேக்கம் மற்றும் வெள்ள பாதிப்புகளைத் தவிர்க்க...

சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை,கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தீவிர விசாரணைக்குப்...

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...