கோவை போத்தனூர் ரயில்வே மருத்துவமனை அருகே அழிவின் விளிம்பில் உள்ள மணில்கரா கௌகி மரம் இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், ஆரண்யா என்ற அமைப்பினர் அதன் விதைகளை சேகரித்து எண்ணிக்கை அதிகரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
கோவை: சப்போட்டா பழம் என்பது அனைவருக்கும் பிடித்தமான பழங்களில் ஒன்றாகும். சப்போட்டா என்பது ஆஸ்திரேலியாவை தாயகமாக கொண்ட சப்போட்டா குடும்பத்தின் ஒரு வகையாக உள்ள மணில்கரா கௌகி என்ற பழமையான மரத்தின் எண்ணிக்கை மிகவும் குறைந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த பழமையான மரம் தற்போது போத்தனூர் ரயில்வே மருத்துவமனை அருகே கண்டறியப்பட்டுள்ளது. அழிவின் விளிம்பில் உள்ள இந்த மரத்தை பாதுகாக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் முயற்சி எடுத்து வருகின்றனர்.

இதற்காக புதுச்சேரியைச் சேர்ந்த ஆரண்யா என்ற வன அமைப்பின் நிறுவனர் சரவணன், இந்த மரத்தின் விதைகளை சேகரித்து அதைச் செடியாக உருவாக்க முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

இவருக்கு உதவியாக கோவையைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர்கள் பாரதிதாசன் மற்றும் பாண்டியராஜன் ஆகியோர் அதன் விதை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல சப்போட்டா பழம் நேரடியாக அதிகபட்சமாக அதன் மரத்தில் முளைக்காமல் ஒட்டு செடிகள் மூலமே முளைக்கிறது. ஆகவே சப்போட்டா பழத்தின் விளைச்சலை அதிகரிக்கவும் இந்த மரம் ஒட்டுச்செடிக்கு பயன்படுமென ஆரண்யா வனம் அமைப்பு உறுதி செய்துள்ளது.
மேலும் ஆங்கிலேயர் காலத்தில் வைக்கப்பட்ட சுமார் 150 முதல் 200 ஆண்டுகள் வரை பழமையான இந்த மரத்தை பாதுகாப்பதும் மற்றும் இந்த மரத்தின் எண்ணிக்கையை அதிகரிப்பதும் கடமை என அவ்வமைப்பினர் செயல்பட்டு வருகின்றனர்.

அழிவின் விளிம்பில் உள்ள ஒரு மரத்தை பாதுகாக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் எடுத்துள்ள முயற்சி அனைவர் மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த பழமையான மரம் தற்போது போத்தனூர் ரயில்வே மருத்துவமனை அருகே கண்டறியப்பட்டுள்ளது. அழிவின் விளிம்பில் உள்ள இந்த மரத்தை பாதுகாக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் முயற்சி எடுத்து வருகின்றனர்.
இதற்காக புதுச்சேரியைச் சேர்ந்த ஆரண்யா என்ற வன அமைப்பின் நிறுவனர் சரவணன், இந்த மரத்தின் விதைகளை சேகரித்து அதைச் செடியாக உருவாக்க முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
இவருக்கு உதவியாக கோவையைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர்கள் பாரதிதாசன் மற்றும் பாண்டியராஜன் ஆகியோர் அதன் விதை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல சப்போட்டா பழம் நேரடியாக அதிகபட்சமாக அதன் மரத்தில் முளைக்காமல் ஒட்டு செடிகள் மூலமே முளைக்கிறது. ஆகவே சப்போட்டா பழத்தின் விளைச்சலை அதிகரிக்கவும் இந்த மரம் ஒட்டுச்செடிக்கு பயன்படுமென ஆரண்யா வனம் அமைப்பு உறுதி செய்துள்ளது.
மேலும் ஆங்கிலேயர் காலத்தில் வைக்கப்பட்ட சுமார் 150 முதல் 200 ஆண்டுகள் வரை பழமையான இந்த மரத்தை பாதுகாப்பதும் மற்றும் இந்த மரத்தின் எண்ணிக்கையை அதிகரிப்பதும் கடமை என அவ்வமைப்பினர் செயல்பட்டு வருகின்றனர்.
அழிவின் விளிம்பில் உள்ள ஒரு மரத்தை பாதுகாக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் எடுத்துள்ள முயற்சி அனைவர் மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.