உக்கடம் சிஎம்சி காலனியில் நடைபெற்று வரும் மேம்பால பணிகள் மற்றும் 520 குடியிருப்புகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்தின் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் சமீரன்,பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
கோவை: நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு ஒப்பணகாரவீதி வரை 121.82 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
உக்கடம் ஆத்துப்பாலம் மேம்பாலம், திண்டுக்கல்- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையான கரும்புகடையில் ஆரம்பித்து உக்கடம் மார்க்கெட் பகுதியில் முடிவடைகிறது. கரும்புக்கடை முதல் உக்கடம் சந்திப்பு வரையிலான 4 வழி மேம்பாலம் உக்கடம் ஒப்பணக்கார விதி வரை இருவழி இறங்கு தனம் என மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில் உக்கடம் சி.எம்.சி காலனி பகுதியில் நடைபெற்று வரும் மேம்பாலப்பணிகளை மாவட்ட ஆட்சியர் சமீரன் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடித்திட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் சிஎம்சி காலனியில் 49 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 520 குடியிருப்புகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பையும் ஆய்வு செய்த ஆட்சியர் சமீரன், பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

அதனைத்தொடர்ந்து உக்கடம் மீன் அங்காடியில் மீன்கள் சுகாதாரமான முறையில் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்தும்,கடைகள் சுத்தமாக பராமரிக்கப்படுகின்றதா என்பது குறித்தும் ஆட்சியர் சமீரன் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் செயற்பொறியாளர் வெங்கடேசன், உதவிப்பொறியாளர் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
உக்கடம் ஆத்துப்பாலம் மேம்பாலம், திண்டுக்கல்- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையான கரும்புகடையில் ஆரம்பித்து உக்கடம் மார்க்கெட் பகுதியில் முடிவடைகிறது. கரும்புக்கடை முதல் உக்கடம் சந்திப்பு வரையிலான 4 வழி மேம்பாலம் உக்கடம் ஒப்பணக்கார விதி வரை இருவழி இறங்கு தனம் என மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில் உக்கடம் சி.எம்.சி காலனி பகுதியில் நடைபெற்று வரும் மேம்பாலப்பணிகளை மாவட்ட ஆட்சியர் சமீரன் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடித்திட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் சிஎம்சி காலனியில் 49 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 520 குடியிருப்புகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பையும் ஆய்வு செய்த ஆட்சியர் சமீரன், பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
அதனைத்தொடர்ந்து உக்கடம் மீன் அங்காடியில் மீன்கள் சுகாதாரமான முறையில் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்தும்,கடைகள் சுத்தமாக பராமரிக்கப்படுகின்றதா என்பது குறித்தும் ஆட்சியர் சமீரன் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் செயற்பொறியாளர் வெங்கடேசன், உதவிப்பொறியாளர் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.