கோவையில் மூட்டை மூட்டையாக ரேசன் அரிசி பறிமுதல் - 4.5 டன் அரிசி பறிமுதல்

அன்னம்பாளையத்தில் உள்ள மீன் பண்ணையில் 50 கிலோ எடையுள்ள 90 ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. சுமார், 4.5 டன் எடை கொண்ட அரிசி பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.



கோவை: தமிழ்நாட்டில் இருந்து கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி சட்டவிரோதமாக கடத்தப்பட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது. தமிழ்நாட்டில் இலவசமாகவும், குறைந்த விலைக்கு ரேஷன் அரிசி கிடைக்கப் பெறுவதால், அதனை கொள்முதல் செய்யும் சட்டவிரோத கும்பல், அண்டை மாநிலங்களுக்கு கடத்திச் சென்று, விற்று லாபம் பார்த்து வருகின்றனர்.

ரேஷன் அரிசி கடத்தலை தடுப்பதற்காக குடிமை பொருள் வழங்கல் புலனாய்வுத்துறை அதிகாரிகள் அதிரடி வாகன தணிக்கை மற்றும் சந்தேகிக்கும் படியாக உள்ள இடங்களில் தொடர் சோதனை நடத்தி வருகின்றனர்.

அதன்படி, இன்று குடிமை பொருள் அதிகாரிகளின் சோதனையின் போது, கோவை அன்னம்பாளையம் பகுதியில் மீன் பண்ணையில் உள்ள ஷெட் ஒன்றில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.

சோதனையில், 50 கிலோ எடையுள்ள 90 ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. சுமார், 4.5 டன் எடை கொண்ட அரிசி பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.



அப்போது, அங்கிருந்த மாரிமுத்து என்பவரை குடிமை பொருள் அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்திய போது, அவர் கேரள உள்ளிட்டு வெளி மாநிலங்களுக்கு ரேஷன் அரிசியை கடத்தி விற்று வருவது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, மாரிமுத்துவை அதிகாரிகள் கைது செய்தனர்.

மேலும், அரிசி கடத்தலில் ஈடுபட்ட சக்தி பெருமாள், சொக்கலிங்கம், கருப்பு, துரை உள்ளிட்ட நான்கு பேரை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் இருந்து சட்ட விரோதமாக ரேஷன் அரிசி கடத்தி வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என குடிமைப் பொருள் புலனாய்வு காவல்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...