கால்பந்து விளையாட்டிற்கு இந்திய அரசு முதன்மை இடத்தை தர வேண்டும் - த.பெ.தி.க சார்பில் சிறுவர்களுடன் நூதன போராட்டம்

கிரிக்கெட் விளையாட்டிற்கு கிடைக்கும் அங்கீகாரம் கால்பந்து விளையாட்டிற்கு கிடைப்பதில்லை என்றும் கால்பந்து விளையாட்டிற்கு இந்திய அரசு முதன்மை இடத்தை தரவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.



கோவை: இந்தியாவில் கால்பந்து விளையாட்டிற்கு முதன்மை இடத்தை தர வலியுறுத்தி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பில் போராட்டம் நடைபெற்றது.



கால்பந்து விளையாடும் சிறுவர்களுடன் நடைபெற்ற இந்த நூதன ஆர்ப்பாட்டத்தில், கால்பந்து விளையாட்டிற்கு மத்திய மாநில அரசுகள் முதன்மை இடத்தை தர வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டது.



மேலும், கிரிக்கெட் விளையாட்டிற்கு கிடைக்கும் அங்கீகாரம் கால்பந்து விளையாட்டிற்கு கிடைப்பதில்லை என தெரிவித்த அவர்கள் கிரிக்கெட் விளையாட்டு ஒரு சூதாட்டம் எனவும் முழக்கங்களை எழுப்பினர்.



தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் உட்பட திராவிட கட்சிகளை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

"அனைத்து மாவட்டங்களிலும் கால்பந்து விளையாட்டு மைதானங்கள் அமைக்க வேண்டும் எனவும் கால்பந்து விளையாட்டு போட்டிகளை நடத்தி இளைஞர்கள் மத்தியில் இப்போட்டிக்கான ஊக்கத்தை உருவாக்க வேண்டும்", என்று தந்தை பெரியார் திராவிட கழகப் பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன் தெரிவித்தார்.



தற்போது, கட்டாரில் FIFA உலக கால்பந்து ஆட்டம் நடைபெற்று வரும் நிலையில், கால்பந்து விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...