கோவை கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதியில் கடும் பனிப்பொழிவு - வாகன ஓட்டிகள் அவதி

கடும் பனிப்பொழிவு காரணமாக கோவை - பொள்ளாச்சி இடையேயான நான்கு வழிச்சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடியே மெதுவாக சென்ற நிலையில், 8 மணிக்கு மேலும் பனி விலகாததால் வாகன ஓட்டிகள் அவதி.


கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் கடுமையான வெயிலும் இரவு நேரங்களில் கடும் குளிரும் நிலவி வருகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலை முதல் கிணத்துக்கடவு, தாமரைக்குளம், கோவில்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது.

பனிப்பொழிவு காரணமாக கோவை - பொள்ளாச்சி இடையேயான நான்கு வழிச்சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனி மூட்டங்கள் சாலையை மறைத்தவாறு இருந்தன.

இதனால் நான்கு வழிச்சாலை வழியாக கோவை பொள்ளாச்சி சென்ற இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடியே மெதுவாகவே பயணித்தன.

மேலும் காலை 8 மணிக்கு மேலாகவும் இயல்பு நிலைக்கு திரும்பாததால் பொதுமக்களும், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...