கூடலூரில் வீடுகளை இடித்து அட்டகாசம் செய்த மக்னா யானையை பிடிக்கும் பணியில் வனத்துறை தீவிரம்

கூடலூர் அருகே மூதாட்டியை கொன்றதுடன், ஏராளமான வீடுகளை இடித்து அட்டகாசம் செய்த PM2 மக்னா யானையை பிடிக்க வனத்துறையினர் தயாரான நிலையில், யானையானது கேரளா மாநில எல்லைக்கு சென்றதால் மீண்டும் வந்தவுடன் பிடித்து இடமாற்றம் செய்யப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.



நீலகிரி: கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் 45-க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்து சேதப்படுத்தியதோடு, கடந்த 19ஆம் தேதி பாப்பாத்தி என்ற மூதாட்டி உயிர் இழப்பிற்கு காரணமான PM-2 மக்னா யானையை பிடித்து இடமாற்றம் செய்வதற்கான உத்தரவு நேற்று வழங்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து அட்டகாசம் செய்த யானையை பிடிப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் தலைமையில் கால்நடை மருத்துவ குழுவினரின் உதவியோடு யானையை பிடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.



மக்னா யானையின் குணாதிசயங்கள், அது சென்று வரும் வழிகள் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்து அதற்கு ஏற்ப யானையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வனத்துறை பணியாளர்கள் மற்றும் வேட்டைதடுப்பு காவலர்கள் வியூகம் வகுத்துள்ளனர்.



இது தொடர்பாக முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளதாவது, கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக மக்னா யானையை கண்காணித்து வரும் வனத்துறை பணியாளர்களோடு ஆலோசனை நடத்தப்படுள்ளதாகவும் அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் யானையை பிடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கூறினார்.

சரியான சூழல் அமையும் போது யானை பிடிக்கப்பட்டு இடமாற்றம் செய்யப்படும் என கூறிய அவர், கோவை உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகளை பிடிப்பதில் அனுபவம் வாய்ந்த வனத்துறையினர் இந்த பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...