கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் நடைபெறும் மேம்பால பணிகளை ஆய்வு செய்த கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ. பி.ஆர்.ஜி.அருண்குமார்

கோவை - மேட்டுப்பாளையம் சாலை ஜி.என்.மில்ஸ் பகுதியில் நடைபெற்று வரும் மேம்பால பணிகளை கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் ஆய்வு செய்து, சாலை செப்பனிடும் பணிகள் குறித்து பொறியாளரிடம் கேட்டறிந்தார்.



கோவை: கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் கவுண்டம்பாளையம் அருகே மேம்பாலம் சில மாதங்களுக்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.



இதனை தொடர்ந்து, மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள ஜி.என்.மில்ஸ், துடியலூர், பெரியநாயக்கன் பாளையம் ஆகிய இடங்களில் மேம்பால பணிகள் நடைபெற்று வருகின்றன.



இந்நிலையில் ஜி.என். மில்ஸ் பகுதியில் நடைபெற்று வரும் மேம்பால பணிகளை கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



அப்போது, மேம்பால பணிகளையும் அங்குள்ள சாலைகளையும், பாதசாரிகள் பயன்படுத்தும் நடைமேடைகளையும் பார்வையிட்டார். மேலும் அப்பகுதியில் சாலைகள் செப்பனிடும் பணிகள் குறித்தும் பொறியாளர்களிடம் கலந்தாலோசித்தார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...