திருப்பூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்றுக் கொண்டிருந்த புது பேருந்து நிலையம் மற்றும் பிற நான்கு கட்டிடங்களில் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் நாளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக அவற்றை திறந்து வைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
திருப்பூர்: திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவற்றின் ஒவ்வொரு பணிகளும் நிறைவடைந்து செயல்படுத்தப்பட்டும் வருகின்றன. சமீபத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட மீன் சந்தை திறக்கப்பட்டு ரூ.1.41 கோடிக்கு ஏலம் விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் அதே நேரத்தில் திருப்பூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பழைய பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு மீண்டும் 39 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வந்த நிலையில் அதன் பணிகளும் நிறைவடைந்துள்ளன.
மேலும் அதேபோல 19 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல அடுக்கு வாகன நிறுத்தும் கட்டிடம் 13 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.
மேலும் வாரச்சந்தை மற்றும் 5 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பூ மார்க்கெட் உள்ளிட்டவையும் கட்டுமான பணிகள் நிறைவடைந்து உள்ளது.
திருப்பூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்றுக் கொண்டிருந்த இப்பணிகள் நிறைவடைந்தது செயல்பட தயார்நிலையில் உள்ளதால் நாளை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக புது பேருந்து நிலையம் மற்றும் பிற நான்கு கட்டிடங்களையும் திறந்து வைக்க உள்ளார்.
அதனை சிறப்பிக்கும் வகையில் அப்பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது.