திருப்பூர் ஆட்சியர் அலுவலக வாயிலில் விளம்பர பதாகை-எச்சரிக்கையை அலட்சியப்படுத்திய மாநகராட்சி நிர்வாகம்

திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக நுழைவு வாயிலில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகை மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பை அலட்சியப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் எந்த விதமான விளம்பர பதாகைகள் மற்றும் சுவரொட்டிகள் ஒட்டக்கூடாது என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.



ஆனால் அதனையும் மீறி பல்வேறு அமைப்பினர் தங்கள் விளம்பர பதாகைகளை ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் வைத்துள்ளனர்.



மாவட்ட நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்புகள் பொதுமக்களுக்கு தெரியப்படுத்துவதற்காக மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பு பதாகைகளை தவிர எந்த ஒரு பதாகைகளும் இடம் பெறக் கூடாது என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை பலகை வைத்திருந்தும் கூட பல்வேறு அமைப்பினர் மட்டுமின்றி திருப்பூர் மாநகராட்சி நிர்வாகமும் தங்களது விளம்பரப்பதாகையை ஆட்சியர் அலுவலகம் நுழைவாயிலில் வைத்துள்ளது.

மாநகராட்சி நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்டுள்ள இந்த பதாகை மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பை அலட்சியப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...