நீலகிரி கூடலூர் அருகே தேயிலை தோட்டத்தில் மின்சாரம் பாய்ந்து பெண் பலியான சோகம் - சக ஊழியர்கள் சாலை மறியல்

கூடலூரில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்த தேயிலை தோட்ட பெண் ஊழியர் சந்திரம்மாள் உயிரிழந்த நிலையில், முறையாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாத மின் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சக தொழிலாளர்கள் சாலைமறியல்.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ள தேவர் சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட சர்க்கார் மூளை பகுதியை சேந்தவர் சந்திரம்மாள் (45). இவர் அருகாமையில் உள்ள ஒரு தனியார் தேயிலை தோட்டத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், இவர் வழக்கம் போல் இன்று காலை தேயிலை தோட்டத்தில் பணியாற்றுவதற்காக சென்று பணியில் ஈடுபட்ட போது தேயிலை தோட்டத்தின் நடுவே செல்லும் உயர் அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்திருப்பது தெரியாமல் அதனை மிதித்ததில், அவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது.



இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் சக தோட்ட தொழிலாளர்கள் வேலையை புறக்கணித்துள்ளனர். இதனைதொடர்ந்து, தொழிலாளர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அதில் உடன்பாடு எட்டப்படவில்லை.



இந்நிலையில், முறையாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாத மின்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், தனியார் எஸ்டேட் நிர்வாகம் உயிரிழந்த சந்திரம்மாள் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கூடலூர் - கேரள நெடுஞ்சாலையில் சக தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



இதனால் அந்த சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கபட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...