கூடலூரில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்த தேயிலை தோட்ட பெண் ஊழியர் சந்திரம்மாள் உயிரிழந்த நிலையில், முறையாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாத மின் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சக தொழிலாளர்கள் சாலைமறியல்.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ள தேவர் சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட சர்க்கார் மூளை பகுதியை சேந்தவர் சந்திரம்மாள் (45). இவர் அருகாமையில் உள்ள ஒரு தனியார் தேயிலை தோட்டத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில், இவர் வழக்கம் போல் இன்று காலை தேயிலை தோட்டத்தில் பணியாற்றுவதற்காக சென்று பணியில் ஈடுபட்ட போது தேயிலை தோட்டத்தின் நடுவே செல்லும் உயர் அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்திருப்பது தெரியாமல் அதனை மிதித்ததில், அவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் சக தோட்ட தொழிலாளர்கள் வேலையை புறக்கணித்துள்ளனர். இதனைதொடர்ந்து, தொழிலாளர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அதில் உடன்பாடு எட்டப்படவில்லை.

இந்நிலையில், முறையாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாத மின்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், தனியார் எஸ்டேட் நிர்வாகம் உயிரிழந்த சந்திரம்மாள் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கூடலூர் - கேரள நெடுஞ்சாலையில் சக தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் அந்த சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கபட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இவர் வழக்கம் போல் இன்று காலை தேயிலை தோட்டத்தில் பணியாற்றுவதற்காக சென்று பணியில் ஈடுபட்ட போது தேயிலை தோட்டத்தின் நடுவே செல்லும் உயர் அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்திருப்பது தெரியாமல் அதனை மிதித்ததில், அவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் சக தோட்ட தொழிலாளர்கள் வேலையை புறக்கணித்துள்ளனர். இதனைதொடர்ந்து, தொழிலாளர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அதில் உடன்பாடு எட்டப்படவில்லை.
இந்நிலையில், முறையாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாத மின்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், தனியார் எஸ்டேட் நிர்வாகம் உயிரிழந்த சந்திரம்மாள் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கூடலூர் - கேரள நெடுஞ்சாலையில் சக தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் அந்த சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கபட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.