கோவை அருகே விபத்தில் சிக்கியவர்களை தனது பாதுகாப்பு வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பிய அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மக்கள் பாராட்டு..!

ஒத்தக்கால்மண்டபம் ஏழூர் பிரிவு அருகே இரண்டு இரு சக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் காயம் அடைந்த மூவரை அவ்வழியாக வந்த அமைச்சர் செந்தில் பாலாஜி தனது பாதுகாப்பு வாகனத்தில் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்.



கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஜமீன் காளியாபுரம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (72). இவர் கோவை மயிலேரிபாளையம் பகுதியில் உள்ள தனது மகள் வீட்டிற்குச் செல்ல தனது இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

அப்போது ஒத்தக்கால்மண்டபம் ஏழூர் பிரிவு அருகே வந்த போது, கோவையில் இருந்து பொள்ளாச்சி நோக்கிச் சென்ற இரு சக்கர வாகனம் சீனிவாசன் வந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது, இதில் தூக்கி வீசப்பட்டு, சீனிவாசன் மற்றும் மோதிய வாகனத்தில் வந்த தயா மற்றும் முகமது தவ்ஃபிக் ஆகியோர் காயமடைந்தனர்.



அப்போது, அவ்வழியாக பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கி வந்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உடனடியாக தனது கான்வாயை நிறுத்தி இறங்கி வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்க்கும் நடவடிக்கையில் இறங்கினார்.



உடனே ஆம்புலென்ஸுக்கு தகவல் அளித்த நிலையில், விபத்தில் சிக்கிய மூவரை தனக்கு பாதுகாப்புக்கு வந்த எஸ்கார்ட் போலீஸ் வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவிட்டார்.

விபத்தில் சிக்கியவர்களை துரிதமாக மீட்டு, ஆம்புலன்ஸ்காக காத்திருக்காமல் தனது எஸ்கார்ட் வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அமைச்சர் செந்தில் பாலாஜி மக்கள் வெகுவாக பாராட்டினார்.

மேலும், இந்த விபத்து தொடர்பாக செட்டிபாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...