கோவையில் குடிபோதையில் செல்ஃபோன் டவரில் ஏறி வாலிபர் ரகளை

கணபதி சாலையில் உள்ள செல்ஃபோன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்து வரும் வாலிபரால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. போதையில் உள்ள அந்த நபரை மீட்க தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் தீவிரமாக போராடி வருகின்றனர்.



கோவை: கோவை கணபதி பகுதியில் உள்ள ஜியோ செல்போன் டவர் மீது ஏறிய ஒரு வாலிபர், குடிபோதையில் தற்கொலை மிரட்டல் விடுத்து வருவதால், போலீசார் மற்றும் தீயணைப்பு துறை அவரை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



இன்று யாரும் எதிர்பாராத விதமாக, திடீரென, குடிபோதையில் இருந்த வாலிபர் கணபதி பகுதியில் உள்ள செல்போன் டவர் மீது ஏறி வருவதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அந்த வாலிபரை தடுக்க வேறொரு டவர் மீது ஏறி உள்ளார்.



மெல்ல மெல்ல டவரின் உச்சிக்கே சென்ற அந்த நபர், தற்போது டவரின் நட்டு, போல்டுகளை கழற்றி கீழே எரிந்து வருகிறார்.



அது மட்டுமின்றி டவரின் உச்சி பகுதியில் உள்ள ஆண்டனாவை ஆட்டியும் ரகளையில் ஈடுபட்டு வருகிறார். டவரின் மீது இடி தாங்கி, ஆண்டனா அகற்றப்பட்டு உடல் முழுவதும் அந்த நபர் கீறி வருகிறார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், போதையில் உள்ள அந்த வாலிபரை மீட்க போராடி வருகின்றனர். தற்கொலைக்கு முயன்று மிரட்டல் விடுத்து வரும் அந்த வாலிபரின் பெயர் பிரபாகரன் என்று கூறப்படுகிறது. மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனையால் இந்த தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு இருக்கின்றார் என்று கூறப்படுகிறது.



தன் குடும்ப பிரச்சனையை கூறி புலம்பி வரும் அந்த நபர், பொண்டாட்டி வேண்டும், கலெக்டர வர சொல்லுங்க என்று தெரிவித்து கத்தி கூச்சலிட்டு வருகிறார்.

காவல்துறையினரும், தீயணைப்பு வீரர்களும் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்து வரும் நபரை பாதுகாப்புடன் மீட்க போராடி வருகின்றனர். விஷயத்தை கேள்விப்பட்ட பொதுமக்கள் சம்பவ இடத்தில் ஒன்று கூடி வருவதனால், கணபதி பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

Newsletter

தொகுதி மறுசீரமைப்பு திட்டத்திற்கு எதிராக இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியினர் கருப்புக்கொடி போராட்டம்

Coimbatore மாவட்டத்தில் ஒன்றிய அரசின் தொகுதி மறுசீரமைப்பு திட்டத்திற்கு எதிராக இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியினர் தங்கள் வீட...

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...