கோவையில் குடிபோதையில் செல்ஃபோன் டவரில் ஏறி வாலிபர் ரகளை

கணபதி சாலையில் உள்ள செல்ஃபோன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்து வரும் வாலிபரால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. போதையில் உள்ள அந்த நபரை மீட்க தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் தீவிரமாக போராடி வருகின்றனர்.



கோவை: கோவை கணபதி பகுதியில் உள்ள ஜியோ செல்போன் டவர் மீது ஏறிய ஒரு வாலிபர், குடிபோதையில் தற்கொலை மிரட்டல் விடுத்து வருவதால், போலீசார் மற்றும் தீயணைப்பு துறை அவரை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



இன்று யாரும் எதிர்பாராத விதமாக, திடீரென, குடிபோதையில் இருந்த வாலிபர் கணபதி பகுதியில் உள்ள செல்போன் டவர் மீது ஏறி வருவதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அந்த வாலிபரை தடுக்க வேறொரு டவர் மீது ஏறி உள்ளார்.



மெல்ல மெல்ல டவரின் உச்சிக்கே சென்ற அந்த நபர், தற்போது டவரின் நட்டு, போல்டுகளை கழற்றி கீழே எரிந்து வருகிறார்.



அது மட்டுமின்றி டவரின் உச்சி பகுதியில் உள்ள ஆண்டனாவை ஆட்டியும் ரகளையில் ஈடுபட்டு வருகிறார். டவரின் மீது இடி தாங்கி, ஆண்டனா அகற்றப்பட்டு உடல் முழுவதும் அந்த நபர் கீறி வருகிறார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், போதையில் உள்ள அந்த வாலிபரை மீட்க போராடி வருகின்றனர். தற்கொலைக்கு முயன்று மிரட்டல் விடுத்து வரும் அந்த வாலிபரின் பெயர் பிரபாகரன் என்று கூறப்படுகிறது. மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனையால் இந்த தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு இருக்கின்றார் என்று கூறப்படுகிறது.



தன் குடும்ப பிரச்சனையை கூறி புலம்பி வரும் அந்த நபர், பொண்டாட்டி வேண்டும், கலெக்டர வர சொல்லுங்க என்று தெரிவித்து கத்தி கூச்சலிட்டு வருகிறார்.

காவல்துறையினரும், தீயணைப்பு வீரர்களும் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்து வரும் நபரை பாதுகாப்புடன் மீட்க போராடி வருகின்றனர். விஷயத்தை கேள்விப்பட்ட பொதுமக்கள் சம்பவ இடத்தில் ஒன்று கூடி வருவதனால், கணபதி பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...