குனியமுத்தூர் - சுண்டக்காமுத்தூர் சாலையில் நின்றிருந்த நிதி நிறுவன ஊழியர் சபரிநாதனின் செல்போன் மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிர தேடி வருகின்றனர்.
கோவை: கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சபரிநாதன். இவர் டிப்ளமோ படித்துவிட்டு தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் நேற்றைய தினம் சபரிநாதன் குனியமுத்தூர் - சுண்டக்காமுத்தூர் சாலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், சபரிநாதன் வைத்திருந்த செல்போன் மற்றும் பணத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக சபரிநாதன் குனியமுத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
இதனை தொடர்ந்து, செல்போன் மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நடைபெற்ற இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நேற்றைய தினம் சபரிநாதன் குனியமுத்தூர் - சுண்டக்காமுத்தூர் சாலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், சபரிநாதன் வைத்திருந்த செல்போன் மற்றும் பணத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக சபரிநாதன் குனியமுத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
இதனை தொடர்ந்து, செல்போன் மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நடைபெற்ற இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.