கோத்தகிரி அருகே உள்ள கக்குச்சி கிராமத்தில் நடைபெற்ற வன திருவிழாவில் 2022 மரக்கன்றுகள் நடப்பட்டன

கக்குச்சி கிராமத்தில் நடைபெற்ற வனத்திருவிழாவில் வனத்திறை அமைச்சர் ராமசந்திரன் பங்கேற்றார் . மேலும், வனத்திருவிழாவை சிறப்பிக்கு வகையில் பள்ளிக் குழந்தைகள் பங்கேற்ற விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.



நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் இயற்கை வளத்தைக் காக்கும் வகையில் நாக்குபெட்டா அமைப்பின் சார்பில் கோத்தகிரி அருகே உள்ள கக்குச்சி கிராமத்தில் மரக் கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சிக்கு நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமை வகித்தார். நாக்குபெட்டா அமைப்பின் நிறுவனர் ராமகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார்.



இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், ஜெயபிரகாஷ் பெள்ளி, இந்திய நிலக்கரி கழக இயக்குநர் மற்றும் இந்திய தேயிலை வாரிய உறுப்பினருமான ராஜேஷ் சந்தர் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.



இந்நிகழ்ச்சியில் கக்குச்சி கிராமப் பகுதிகள் மற்றும் பள்ளி வளாகம் உள்ளிட்ட இடங்களில் மொத்தம் 2022 சோலை மர நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டன. தொடர்ந்து நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியும் நடைபெற்றது.



இப்பேரணியில் பள்ளிக் குழந்தைகள் பங்கேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இறுதியாக படுகர் இன மக்கள் ஒன்றாககூடி தங்களது கலாச்சார நடனமாடி மகிழ்ந்தனர். இதில் கிராம மக்கள், அரசுத் துறை அலுவலர்கள், நாக்குபெட்டா அமைப்பின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...