கல்லூரி சாலையில் உள்ள ஐயப்பன் கோவிலின் 63ஆம் ஆண்டு மண்டல பூஜை கடந்த 14ஆம் தேதி தொடங்கிய நிலையில், பெருமாள் கோவில் தெப்பக்குளத்தில் நடைபெற்ற ஆராட்டு விழாவில் ஏராளமான பக்தர்கள் தரிசனம்.
திருப்பூர்: திருப்பூர் கல்லூரி சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் 63ஆம் ஆண்டு மண்டல பூஜை விழா கடந்த 14ஆம் தேதி தொடங்கியது.
இந்த மண்டல பூஜை விழாவின் முக்கிய நிகழ்வான ஆராட்டு விழா திருப்பூர் பெருமாள் கோவிலில் உள்ள தெப்பக்குளத்தில் நடைபெற்றது.
இதில்ஐயப்பனுக்கு மஞ்சள், தேன், பஞ்சாமிர்தம், குங்குமம், பால், தயிர் விபூதி, சந்தனம் உள்ளிட்ட ஏராளமான மங்கலப் பொருட்களைக் கொண்டு சிறப்புஅபிஷேகம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து வீரராகவப் பெருமாள் கோவிலில் உள்ள தெப்ப குளத்தில் கங்கை, காவேரி , பம்பை ஆற்று புனித நீரை ஊற்றியும், பன்னீர், இளநீர், ரோஜா, தாமரைமலர்கள் , வெட்டி வேர் ஆகியவை நிரம்பிய தெப்பகுளத்தின் மஞ்சள் நீரில், அபிஷேக பிரியன் ஐயப்பன் சாமிக்கு ஆராட்டு விழா நடைபெற்றது.
இதில் திருப்பூர் உள்பட பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு,சாமியே சரணம் ஐயப்பா என்ற கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.