கோவையில் குரூப்-1 தேர்வுக்காக 49 மையங்கள் அமைக்கப்பட்டிருந்த நிலையில் 9 மணிக்குள்ளாக வந்த தேர்வர்கள் மட்டுமே தீவிர சோதனைக்கு பின்னர் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டனர்.
கோவை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் நடத்தப்படும் குரூப்-1 முதல் நிலைத்தேர்வு தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்றது.
இந்நிலையில், குரூப்-1 தேர்வுக்காக கோவை மாவட்டத்தில் 49 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 15 ஆயிரத்து 81 போ் எழுத விண்ணப்பித்திருந்தனர்.
தேர்வை கண்காணிப்பதற்காக துணை ஆட்சியர் நிலையில் 5 பறக்கும் படை அலுவலர்கள், 12 மொபைல் அலுவலர்கள், 49 தேர்வுக் கூட கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு இருந்தனர்.
இதனிடையே தேர்வு இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கி நண்பகல் 12.30 மணி வரை நடைபெற்றது. இந்நிலையில், தேர்வர்கள் காலை 9 மணிக்குள் தேர்வு மையத்துக்குள் இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு இருந்தது.
அதன்படி தேர்வர்கள் தேர்வு மையத்துக்கு வந்தனர். 9 மணிக்கு பிறகு தேர்வு மையத்தின் கதவுகள் அடைக்கப்பட்டன. இந்நிலையில், காலதாமதமாக வந்தவர்கள் உள்ளே அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டனர்.
முன்னதாக தேர்வு எழுத வந்தவர்களை போலீசார் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதித்தனர். ஆள்மாறாட்டம்நடப்பதை தவிர்க்கும் வகையில், தேர்வர்களின் ஹால்டிக்கெட் பரிசோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
தேர்வு மையத்துக்கு எளிதாக வந்து செல்லும் வகையில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் சார்பில் காந்திபுரம், உக்கடம் பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் திருப்பூர் மாவட்டத்திலும் இன்று குரூப் 1 தேர்வு நடைபெற்றது. இதற்காக திருப்பூரில் 20 மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வுகள் நடைபெற்றன. இந்நிலையில், தேர்வில் பங்கேற்க 5,856 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 2,617 பேர் தேர்வில் பங்கேற்க வில்லை என டி.என்.பி.எஸ்.சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குரூப்-1 தேர்வுக்காக கோவை மாவட்டத்தில் 49 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 15 ஆயிரத்து 81 போ் எழுத விண்ணப்பித்திருந்தனர்.
தேர்வை கண்காணிப்பதற்காக துணை ஆட்சியர் நிலையில் 5 பறக்கும் படை அலுவலர்கள், 12 மொபைல் அலுவலர்கள், 49 தேர்வுக் கூட கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு இருந்தனர்.
இதனிடையே தேர்வு இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கி நண்பகல் 12.30 மணி வரை நடைபெற்றது. இந்நிலையில், தேர்வர்கள் காலை 9 மணிக்குள் தேர்வு மையத்துக்குள் இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு இருந்தது.
அதன்படி தேர்வர்கள் தேர்வு மையத்துக்கு வந்தனர். 9 மணிக்கு பிறகு தேர்வு மையத்தின் கதவுகள் அடைக்கப்பட்டன. இந்நிலையில், காலதாமதமாக வந்தவர்கள் உள்ளே அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டனர்.
முன்னதாக தேர்வு எழுத வந்தவர்களை போலீசார் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதித்தனர். ஆள்மாறாட்டம்நடப்பதை தவிர்க்கும் வகையில், தேர்வர்களின் ஹால்டிக்கெட் பரிசோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
தேர்வு மையத்துக்கு எளிதாக வந்து செல்லும் வகையில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் சார்பில் காந்திபுரம், உக்கடம் பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் திருப்பூர் மாவட்டத்திலும் இன்று குரூப் 1 தேர்வு நடைபெற்றது. இதற்காக திருப்பூரில் 20 மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வுகள் நடைபெற்றன. இந்நிலையில், தேர்வில் பங்கேற்க 5,856 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 2,617 பேர் தேர்வில் பங்கேற்க வில்லை என டி.என்.பி.எஸ்.சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.