குரூப்-1 தேர்வு: கோவையில் தீவிர சோதனைக்கு பின்னரே மாணவர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதி

கோவையில் குரூப்-1 தேர்வுக்காக 49 மையங்கள் அமைக்கப்பட்டிருந்த நிலையில் 9 மணிக்குள்ளாக வந்த தேர்வர்கள் மட்டுமே தீவிர சோதனைக்கு பின்னர் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டனர்.


கோவை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் நடத்தப்படும் குரூப்-1 முதல் நிலைத்தேர்வு தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்றது.

இந்நிலையில், குரூப்-1 தேர்வுக்காக கோவை மாவட்டத்தில் 49 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 15 ஆயிரத்து 81 போ் எழுத விண்ணப்பித்திருந்தனர்.

தேர்வை கண்காணிப்பதற்காக துணை ஆட்சியர் நிலையில் 5 பறக்கும் படை அலுவலர்கள், 12 மொபைல் அலுவலர்கள், 49 தேர்வுக் கூட கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு இருந்தனர்.

இதனிடையே தேர்வு இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கி நண்பகல் 12.30 மணி வரை நடைபெற்றது. இந்நிலையில், தேர்வர்கள் காலை 9 மணிக்குள் தேர்வு மையத்துக்குள் இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு இருந்தது.

அதன்படி தேர்வர்கள் தேர்வு மையத்துக்கு வந்தனர். 9 மணிக்கு பிறகு தேர்வு மையத்தின் கதவுகள் அடைக்கப்பட்டன. இந்நிலையில், காலதாமதமாக வந்தவர்கள் உள்ளே அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டனர்.

முன்னதாக தேர்வு எழுத வந்தவர்களை போலீசார் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதித்தனர். ஆள்மாறாட்டம்நடப்பதை தவிர்க்கும் வகையில், தேர்வர்களின் ஹால்டிக்கெட் பரிசோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

தேர்வு மையத்துக்கு எளிதாக வந்து செல்லும் வகையில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் சார்பில் காந்திபுரம், உக்கடம் பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் திருப்பூர் மாவட்டத்திலும் இன்று குரூப் 1 தேர்வு நடைபெற்றது. இதற்காக திருப்பூரில் 20 மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வுகள் நடைபெற்றன. இந்நிலையில், தேர்வில் பங்கேற்க 5,856 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 2,617 பேர் தேர்வில் பங்கேற்க வில்லை என டி.என்.பி.எஸ்.சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...