கோவை அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற முதலாம் ஆண்டு வகுப்பு தொடக்க விழாவில் பங்கேற்ற மாநகராட்சி ஆணையர் பிரதாப், வாழ்வில் சிறந்து விளங்க வேண்டும் என மாணவர்களுக்கு ஊக்கமளித்தார்.
கோவை: கோவை அரசு பொறியியல் கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்பு துவக்க விழா இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் பேசியதாவது, மனித வாழ்வில் கல்லூரிக் கல்வி பயிலும் பருவத்தின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தினார்.
மேலும், மரபு சார்ந்த கல்வி முறைகளுடன், மாணவர்களின் தனித்திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். கோவையில்தொழில்நுட்பங்கள் அதிகளவில் உள்ளது. மாணவ, மாணவியா்கள் அனைவரும் கல்வி மற்றும் வாழ்க்கைக்கு தேவையான புதிய அனைத்து விஷயங்களையும் கற்றுக்கொள்ள வேண்டும்.
புதிய முயற்சிகளை மேற்கொண்டு அதில் வெற்றி பெற்றாலும், தோல்வியானாலும் அதன் அனுபவத்தை கொண்டு மீண்டும் முயற்சித்து வெற்றி காண வேண்டும்.மாணவ, மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட துறையில் சிறந்து விளங்கி வாழ்வில் முக்கியமான பொறுப்பு வகித்து நாட்டிற்கு பெருமை சோத்து முன்னோடியாக விளங்க வேண்டும்.
கடின உழைப்பினால் மட்டுமே வாழ்வில் சிறந்து விளங்கி தங்களுடைய குறிக்கோள்களை அடைய முடியும்.
இவ்வாறு மாநகராட்சி ஆணையர் பிரதாப் பேசினார்.
இந்த விழாவில் அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் தாமரை, பேராசிரியர்கள் ராஜேந்திரன்,ரேவதி, முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் செயலாளர் பிரசன்னா மூர்த்தி மற்றும் முதலாம் ஆண்டு மாணவ -மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.