உயர்கல்வித்துறை சார்பில் அனைத்து அரசு கல்லூரி ஆசிரியர்களும் சீருடை போன்ற கண்ணியமான உடைகளை அணிய உத்தரவிட்டுள்ள நிலையில், அதனை உறுதி செய்யுமாறு உறுப்பு கல்லூரிகளுக்கு பாரதியார் பல்கலை சுற்றறிக்கை.
கோவை: கல்லூரி ஆசிரியர்கள் கண்ணியமான உடைகளை அணிய வேண்டும் என உறுப்பு கல்லூரிகளுக்கு பாரதியார் பல்கலைக்கழகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், தொழில்நுட்ப கல்லூரிகள் உள்ளிட்ட உயர் கல்வித்துறையின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஆடை கட்டுப்பாடுகள் விதித்து உயர் கல்வித்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக உயர் கல்வித்துறை துணைச் செயலாளர் தனசேகர், கல்லூரி கல்வி இயக்குநர், தொழில்நுட்ப கல்வி இயக்குநர், மற்றும் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களின் பதிவாளர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அனைத்து கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களும் மாணவர்களிடமிருந்து தங்களை வேறுபடுத்தி காட்டும் விதமாக மேலங்கி (ஓவர் கோட்) அணிய வேண்டும்.
பேராசிரியர்களுக்கு இடையே வேறுபாடுகளை ஏற்படுத்தாதவாறு சீருடை போன்ற கண்ணியமிக்க ஆடைகளை அணிய வேண்டும்.
பேராசிரியர்கள் தங்கள் உடலமைப்பை வெளிக்காட்டாதவாறு மேலங்கியை அணிய வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த உத்தரவை தொடர்ந்து கோவை பாரதியார் பல்கலைகழகம் அதன் உறுப்பு கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கல்லூரிக்கு வரும் ஆசிரியர் சீருடை போன்ற கண்ணியமான உடை அணிவதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், தொழில்நுட்ப கல்லூரிகள் உள்ளிட்ட உயர் கல்வித்துறையின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஆடை கட்டுப்பாடுகள் விதித்து உயர் கல்வித்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக உயர் கல்வித்துறை துணைச் செயலாளர் தனசேகர், கல்லூரி கல்வி இயக்குநர், தொழில்நுட்ப கல்வி இயக்குநர், மற்றும் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களின் பதிவாளர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அனைத்து கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களும் மாணவர்களிடமிருந்து தங்களை வேறுபடுத்தி காட்டும் விதமாக மேலங்கி (ஓவர் கோட்) அணிய வேண்டும்.
பேராசிரியர்களுக்கு இடையே வேறுபாடுகளை ஏற்படுத்தாதவாறு சீருடை போன்ற கண்ணியமிக்க ஆடைகளை அணிய வேண்டும்.
பேராசிரியர்கள் தங்கள் உடலமைப்பை வெளிக்காட்டாதவாறு மேலங்கியை அணிய வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த உத்தரவை தொடர்ந்து கோவை பாரதியார் பல்கலைகழகம் அதன் உறுப்பு கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கல்லூரிக்கு வரும் ஆசிரியர் சீருடை போன்ற கண்ணியமான உடை அணிவதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.