13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 72 வயது முதியவர், கோவை சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கோவை: ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அடுத்த காமராஜ் நகரை சேர்ந்தவர் ரங்கசாமி(72). இவர் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் ரங்கசாமியை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதனையடுத்து வழக்கை விசாரித்த ஈரோடு மகிளா நீதிமன்றம் அவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.
இதையடுத்து ரங்கசாமி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த 16ஆம் தேதி அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் இச்சம்பவம் குறித்து பந்தைய சாலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட குற்றவாளி, உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கில் ரங்கசாமியை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதனையடுத்து வழக்கை விசாரித்த ஈரோடு மகிளா நீதிமன்றம் அவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.
இதையடுத்து ரங்கசாமி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த 16ஆம் தேதி அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் இச்சம்பவம் குறித்து பந்தைய சாலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட குற்றவாளி, உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.