கோவை மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குனர் முருகேசன் பணியிடை நீக்கம் - பெண் ஊழியர் அளித்த பாலியல் புகார் மீது ஆட்சியர் நடவடிக்கை

பெண் ஊழியர் ஒருவர் வீடியோ ஆதாரத்துடன் அளித்த புகாரை விசாரித்த மாவட்ட ஆட்சியர் சமீரன், மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குனர் முருகேசனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.



கோவை: கோவை மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குனராக பணியாற்றி வருபவர் முருகேசன்.



இவர் மீது ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்த நிலையில், துறை அலுவலர்கள் தரப்பிலும் புகார் கொடுக்கப்பட்டிருந்தன.

குறிப்பாக, பெண் ஊழியர் ஒருவர் வீடியோ ஆதாரத்துடன் ஒரு புகாரை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பினார். அதை விசாரித்த ஆட்சியர் சமீரன் உதவி இயக்குனரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இது குறித்து அலுவலக அதிகாரிகள் கூறும் போது: அரசு துறை அலுவலங்களில் ஏராளமான பெண் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர் அவர்களுக்கு பல விதங்களில் பாலியல் தொந்தரவு ஏற்படுகிறது. அவர்கள் புகார் தெரிவிக்க ஆட்சியர் தலைமையில் விசாகா கமிட்டி செயல்படுகிறது.

ஊராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகத்தில் பணிபுரியும் தற்காலிக பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் அனுப்பியிருந்தார். அதன் உண்மை தன்மையை நிரூபிக்க வீடியோவும் சமர்ப்பித்தார். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

முதல் கட்டமாக நிர்வாக ரீதியாக உதவி இயக்குனர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். புகார் உண்மையாக இருப்பின், துறை ரீதியாக அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும், இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...