கோவை அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட முயன்ற இளைஞர் கைது

கோவை பெரிய தடாகம் அருகே கஞ்சா விற்பனை செய்ய முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: பெரிய தடாகம் கோவில்பிரிவு பகுதியில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த இளைஞரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் அவரது உடைமைகளை ஆய்வு செய்தபோது கஞ்சாவை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசாரிடம் 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்தனர்.

கைதான இளைஞரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த விஜய் என்பதும் கோவில் பிரிவு பகுதியில் வசித்து வருவதும் தெரியவந்தது. இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இளைஞரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...