கதிர்நாயக்கன்பாளையத்தில் ஒற்றை காட்டு யானையால் தென்னை மரங்கள் சேதம் - பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தது வனத்துறை

தடாகம் பகுதியில் கடந்த 1 மாதமாக சுற்றித்திரிந்த ஒற்றை காட்டு யானை நேற்று இரவு அங்கிருந்த தோட்டத்தில் தென்னை மரங்களை சேதப்படுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே வரும்போது கவனமாக இருக்க வேண்டுமென வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



கோவை : ஆனைகட்டி மாங்கரை சுற்றி வனப்பகுதிகளால் நிறைந்த பகுதியாகும். இதனால்வனவிலங்குகள் அடிக்கடி ஊருக்குள் வருவது வழக்கமாக இருந்து வந்ததுள்ளன. சுற்றியுள்ள மலைப் பகுதிகளில் மட்டும் சுமார் 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன.

இவைகள் அவ்வப்போது மலை அடிவாரத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகள் மற்றும் தோட்டங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில் தற்போது தடாகம் பகுதியில் கடந்த 1 மாதமாக சுற்றித்திரியும் ஒற்றை காட்டு யானைமற்றும் கூட்டமாக வரும் யானைகள் சுற்றுப் பகுதிகளில் உள்ள தோட்டங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.



இந்த நிலையில் கோவை கதிர்நாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று இரவு 9 மணியளவில் உலா வந்த ஒற்றை காட்டு யானை அங்கிருந்த தோட்டத்தில் தென்னை மரங்களை சேதப்படுத்திச் சென்றுள்ளது.

இதனால் அப்பகுதியில் ஏற்பட்ட பரபரப்பின் காரணமாக பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே வரும்போது எச்சரிக்கையாக இருக்க வனத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் யானை உலா வந்ததை அங்கு இருந்தவர்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...