பல்லடம் அருகே நடந்து சென்றவர்களை மிரட்டி செல்போன் பறித்த கும்பல் கைது - 3 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்

ஹை டெக் பார்க்கின் பின்புறம் நண்பருடன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த சசிகுமார் என்பவரின் செல்போன் பறிப்பு நிகழ்ந்தது. இது சம்பந்தமாக சசிகுமார் புகார் செய்திருந்த நிலையில் காவல்துறையினர் உடுமலை ரோட்டில் வாகன சோதனையில் ஈடுப்பட்டதில் ஆறுபேர் கொண்ட வழிப்பறி கும்பல் சிக்கியது.



திருப்பூர்: பல்லடத்தை அடுத்த சுக்கம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் சசிகுமார் (23) இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார்.

கடந்த 13.11.2022 ஆம் தேதி இரவு 10.30 மணியளவில் கோவையில் உள்ள திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஹை டெக் பார்க்கின் பின்புறம் தனது நண்பர் முருகேசன் என்பவருடன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது மூன்று இருசக்கர வாகனங்களில் வந்த ஆறு நபர்கள் இருவரையும் வழிமறித்து மிரட்டி முருகேசனை கீழே தள்ளிவிட்டு சசிகுமாரிடம் இருந்த செல்போனை பறித்துச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து சசிகுமார் பல்லடம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் பல்லடம் பொள்ளாச்சி மற்றும் உடுமலை ரோடு சந்திப்பு பகுதியில் பல்லடம் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் வந்த ஆறு நபர்களை சந்தேகத்தின் பெயரில் விசாரித்ததில் ஆறு நபர்களும் சேர்ந்து சசிகுமாரை மிரட்டி செல்போனை பறித்துச் சென்ற குற்றத்தை ஒப்புக் கொண்டனர்.

அதனையடுத்து இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட தூத்துக்குடியை சேர்ந்த காசிராமன், பிச்சமுத்து, இசக்கிபாண்டி, மணிகண்டன், சுரேஷ் மற்றும் பல்லடத்தை சேர்ந்த ராஜேஷ்குமார் ஆகியோரை பல்லடம் காவல்துறையினர் கைது செய்தது மேலும் அவர்கள் திருடிய பொருட்களை மீட்டனர்.



கைது செய்யப்பட்ட ஆறு பேரும் வழிப்பறிப்பு சம்பவத்திற்கு பயன்படுத்திய 3 இருசக்கர வாகனங்கள் போலிசார் பறிமுதல் செய்தனர்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...