பல்லடம் எலந்தக்கோட்டை பகுதியில் தூர்வாரப்படாத ஓடை - பாதிக்கப்பட்ட கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட முயற்ச்சி

திருப்பூர் பல்லடம் எலந்தக்கோட்டை பகுதியில் ஓடை தூர்வாரப்படாததால் சாலை மறியலில் ஈடுபட முயற்ச்சித்த கிராம மக்களிடம் பல்லடம் தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.



திருப்பூர்: பல்லடம் அருகே பணிக்கம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட எலந்த குட்டை கிராமம் உள்ளது. இதன் அருகே கேரளாவிற்கு செல்லக்கூடிய சாலை ஓரத்தில் ஓடை ஒன்று உள்ளது. இந்த ஓடை தூர்வாரப்படாமல் முட்புதர்கள் மண்டி கிடைக்கின்றன.



இந்த ஓடையில் பல்லடம் நகராட்சி பகுதிகளில் உள்ள வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் மற்றும் பல்லடம் நகர பகுதிகளில் உள்ள கோழி கழிவுகள், மீன் கழிவுகள், பிளாஸ்டிக் குப்பைகள் என அனைத்தும் இரவோடு இரவாக ஓடையில் கொட்டப்படுவதால் பணிக்கம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுற்று வட்டார பகுதிகளிலும் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.



இந்த ஓடையை தூர்வாரி சுத்தம் செய்யப்பட வேண்டும் என பலமுறை பொதுமக்கள் புகார் தெரிவித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காததால் இன்று எலந்த குட்டை பகுதியை சேர்ந்த மக்கள் 50 க்கு மேற்பட்டவர்கள் பல்லடம் கொச்சி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.



மறியலில் ஈடுபட முயன்ற கிராம மக்களிடம் பல்லடம் தாசில்தார் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினார். ஒரு வார காலத்திற்குள் இந்த குட்டையானது முழுவதும் தூர்வாரப்பட்டு சுத்தம் செய்யப்படும் என தெரிவித்தனர். அடுத்து கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.

இதே நிலை ஒரு வார காலத்திற்கு மேல் ஓடை தூர்வாரப்படாமல் நீடிக்குமானால் கேரளாவுக்கு செல்லக்கூடிய பல்லடம் கொச்சின் சாலையில் கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...