கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலையில் தர்ணாவில் ஈடுபட்ட பெண் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு

கண்ணப்ப நகர் பகுதியை சேர்ந்த கீதாராணி, தனது வீட்டின் மின் இணைப்பை கோவை குமார் என்பவர் துண்டித்த நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட போது திடீரென மயங்கி விழுந்தார்.



கோவை: கோவை கண்ணப்ப நகர் பகுதியை சேர்ந்தவர்கள் வெங்கடேஷ் - கீதாராணி தம்பதி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் அங்குள்ள லைன் வீட்டில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், இவர்களது உறவினரான கோவைகுமார் என்பவர் கடந்த வாரம் வீட்டின் மின் இணைப்பை துண்டித்து விட்டுச் சென்றுள்ளார். மேலும் மின் இணைப்பை கொடுக்க கூடாது என மின்வாரிய ஊழியர்களையும் கோவைகுமார் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக இருளில் இருந்ததாக வெங்கடேஷும் கீதாராணியும், ரத்தினபுரி மற்றும் சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் இதுதொடர்பாக எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிகிறது.



இதன் காரணமாக கணவன் மனைவி இருவரும் தங்களது 2 மகன்களுடன் கோவை ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள பிரதான சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.



அப்போது கீதாராணி திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



இதையடுத்து அங்கிருந்த போலீசார் அவர்களை மீட்டு, சமாதானப்படுத்தி அழைத்துச் சென்று, சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண், திடீரென மயங்கி விழுந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழலை ஏற்படுத்தியது.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...