குப்பேபாளையம் குடியிருப்பு பகுதியில் புகுந்த 10 அடி நீள மலைப்பாம்பு - பத்திரமாக மீட்ட வனத்துறை

கோவை குப்பேபாளையம் குடியிருப்பு பகுதியில் 10 அடி நீளமுள்ள மலைபாம்பு ஒன்று புகுந்த நிலையில், சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் பாம்பை பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.



கோவை: கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அடுத்த குப்பேபாளையம் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்றிரவு குப்பேபாளையம் குடியிருப்பு பகுதிக்குள் சுமார் 10 அடி நீளமுள்ள மலை பாம்பு புகுந்ததாக கூறப்படுகிறது.

இதனை கண்டுஅதிர்ச்சியடைந்த அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

இதனடிப்படையில் வனவர் கோபால் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்தனர். இதனை அடுத்து குடியிருப்பிற்குள் புகுந்த 10 அடி மலைப்பாம்பை சிறிது நேர தேடுதல் வேட்டைக்கு பின்னர் பத்திரமாக மீட்டனர்.



இதனை தொடர்ந்து மீட்கப்பட்ட10 அடி நீளமுள்ள மலைப் பாம்பை பத்திரமாக அடர் வனப்பகுதிக்குள் விடுவித்ததாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

குடியிருப்பு பகுதியில் 10 அடி நீள மலைப்பாம்பு புகுந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...