கோவை குப்பேபாளையம் குடியிருப்பு பகுதியில் 10 அடி நீளமுள்ள மலைபாம்பு ஒன்று புகுந்த நிலையில், சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் பாம்பை பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.
கோவை: கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அடுத்த குப்பேபாளையம் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்றிரவு குப்பேபாளையம் குடியிருப்பு பகுதிக்குள் சுமார் 10 அடி நீளமுள்ள மலை பாம்பு புகுந்ததாக கூறப்படுகிறது.
இதனை கண்டுஅதிர்ச்சியடைந்த அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
இதனடிப்படையில் வனவர் கோபால் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்தனர். இதனை அடுத்து குடியிருப்பிற்குள் புகுந்த 10 அடி மலைப்பாம்பை சிறிது நேர தேடுதல் வேட்டைக்கு பின்னர் பத்திரமாக மீட்டனர்.
இதனை தொடர்ந்து மீட்கப்பட்ட10 அடி நீளமுள்ள மலைப் பாம்பை பத்திரமாக அடர் வனப்பகுதிக்குள் விடுவித்ததாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
குடியிருப்பு பகுதியில் 10 அடி நீள மலைப்பாம்பு புகுந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.