போதை பொருள் தடுப்பு, சாலை பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ரோட்டரி டெக்ஸ்சிட்டி சார்பில் துவங்கப்பட்டுள்ள "யுவ இந்தியா" தொடக்க விழாவில் ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், காவல் ஆணையர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
கோவை: ரோட்டரி டெக்ஸ்சிட்டி சார்பில் துவங்கப்பட்டுள்ள "யுவ இந்தியா" தொடக்க விழா அவிநாசி சாலையில் உள்ள இந்துஸ்தான் கல்லூரியில் நடைபெற்றது.

இதில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

இந்த துவக்க விழாவில் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு இவ்விழாவை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினர்.

மேலும், இந்நிகழ்ச்சியில் அமைக்கப்பட்டிருந்த ராணுவம் மற்றும் விமானப்படை கண்காட்சியை சிறப்பு அழைப்பாளர்கள் பார்வையிட்டனர்.

இந்த "யுவ இந்தியா" என்பது போதை பொருள் தடுப்பு, சாலை பாதுகாப்பு, பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்காக துவக்கப்பட்டுள்ளதாக விழா ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்நிகழ்ச்சியில், ரோட்டரி இண்டர்நேஷனல் இயக்குனர் வெங்கடேஷ் உட்பட ரோட்டரி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
இதில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
இந்த துவக்க விழாவில் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு இவ்விழாவை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினர்.
மேலும், இந்நிகழ்ச்சியில் அமைக்கப்பட்டிருந்த ராணுவம் மற்றும் விமானப்படை கண்காட்சியை சிறப்பு அழைப்பாளர்கள் பார்வையிட்டனர்.
இந்த "யுவ இந்தியா" என்பது போதை பொருள் தடுப்பு, சாலை பாதுகாப்பு, பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்காக துவக்கப்பட்டுள்ளதாக விழா ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்நிகழ்ச்சியில், ரோட்டரி இண்டர்நேஷனல் இயக்குனர் வெங்கடேஷ் உட்பட ரோட்டரி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.