கோவையில் யுவ இந்தியா தொடக்க விழாவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

போதை பொருள் தடுப்பு, சாலை பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ரோட்டரி டெக்ஸ்சிட்டி சார்பில் துவங்கப்பட்டுள்ள "யுவ இந்தியா" தொடக்க விழாவில் ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், காவல் ஆணையர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.


கோவை: ரோட்டரி டெக்ஸ்சிட்டி சார்பில் துவங்கப்பட்டுள்ள "யுவ இந்தியா" தொடக்க விழா அவிநாசி சாலையில் உள்ள இந்துஸ்தான் கல்லூரியில் நடைபெற்றது.



இதில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.



இந்த துவக்க விழாவில் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு இவ்விழாவை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினர்.



மேலும், இந்நிகழ்ச்சியில் அமைக்கப்பட்டிருந்த ராணுவம் மற்றும் விமானப்படை கண்காட்சியை சிறப்பு அழைப்பாளர்கள் பார்வையிட்டனர்.



இந்த "யுவ இந்தியா" என்பது போதை பொருள் தடுப்பு, சாலை பாதுகாப்பு, பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்காக துவக்கப்பட்டுள்ளதாக விழா ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.



மேலும் இந்நிகழ்ச்சியில், ரோட்டரி இண்டர்நேஷனல் இயக்குனர் வெங்கடேஷ் உட்பட ரோட்டரி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...