தமிழக ஆளுநர் மக்களின் நலனுக்காக செயல்படாமல் பாஜக-வின் ஊதுகுழலாக பணியாற்றுகிறார் - திருப்பூரில் துரை வைகோ

நாடாளுமன்ற தேர்தலில் திமுக-வுடனான கூட்டணியே தொடரும் என்று திருப்பூரில் பேட்டியளித்த மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ, மதவாத சக்தியை தோற்கடிக்க இந்தியா முழுவதும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என கூறியுள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் யூனியன் மில் சாலையில் உள்ள தனியார் திரையரங்கில் மாமனிதன் வைகோ என்னும் ஆவணப்படம் திரையிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.



மதிமுக சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டு ஆவணப்படத்தை திரையிட்டார்.



பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக ஆளுநர் மக்களின் நலனுக்காக செயல்படாமல் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்.சின் ஊதுக்குழலாக செயல்பட்டு வருவதாக சாடினார்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக-வுடனான கூட்டணியே தொடரும் என கூறியுள்ள துரை வைகோ, மதவாத சக்திகளை தோற்கடிக்க இந்தியா முழுவதும் எதிர்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

தெலங்கானாவில் ராகுல் காந்தி மேற்கொண்ட நடைபயணத்தில் தான் கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்த போது, நாட்டில் தற்போது உள்ள சூழல் மற்றும் அவைகளை முறியடிக்க மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விவாதித்ததாக கூறினார்.



மாமனிதன் வைகோ ஆவணப்பட திரையிடும் நிகழ்ச்சியில் திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...