தமிழக ஆளுநர் மக்களின் நலனுக்காக செயல்படாமல் பாஜக-வின் ஊதுகுழலாக பணியாற்றுகிறார் - திருப்பூரில் துரை வைகோ

நாடாளுமன்ற தேர்தலில் திமுக-வுடனான கூட்டணியே தொடரும் என்று திருப்பூரில் பேட்டியளித்த மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ, மதவாத சக்தியை தோற்கடிக்க இந்தியா முழுவதும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என கூறியுள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் யூனியன் மில் சாலையில் உள்ள தனியார் திரையரங்கில் மாமனிதன் வைகோ என்னும் ஆவணப்படம் திரையிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.



மதிமுக சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டு ஆவணப்படத்தை திரையிட்டார்.



பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக ஆளுநர் மக்களின் நலனுக்காக செயல்படாமல் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்.சின் ஊதுக்குழலாக செயல்பட்டு வருவதாக சாடினார்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக-வுடனான கூட்டணியே தொடரும் என கூறியுள்ள துரை வைகோ, மதவாத சக்திகளை தோற்கடிக்க இந்தியா முழுவதும் எதிர்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

தெலங்கானாவில் ராகுல் காந்தி மேற்கொண்ட நடைபயணத்தில் தான் கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்த போது, நாட்டில் தற்போது உள்ள சூழல் மற்றும் அவைகளை முறியடிக்க மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விவாதித்ததாக கூறினார்.



மாமனிதன் வைகோ ஆவணப்பட திரையிடும் நிகழ்ச்சியில் திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...