தமிழக ஆளுநர் மக்களின் நலனுக்காக செயல்படாமல் பாஜக-வின் ஊதுகுழலாக பணியாற்றுகிறார் - திருப்பூரில் துரை வைகோ

நாடாளுமன்ற தேர்தலில் திமுக-வுடனான கூட்டணியே தொடரும் என்று திருப்பூரில் பேட்டியளித்த மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ, மதவாத சக்தியை தோற்கடிக்க இந்தியா முழுவதும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என கூறியுள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் யூனியன் மில் சாலையில் உள்ள தனியார் திரையரங்கில் மாமனிதன் வைகோ என்னும் ஆவணப்படம் திரையிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.



மதிமுக சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டு ஆவணப்படத்தை திரையிட்டார்.



பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக ஆளுநர் மக்களின் நலனுக்காக செயல்படாமல் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்.சின் ஊதுக்குழலாக செயல்பட்டு வருவதாக சாடினார்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக-வுடனான கூட்டணியே தொடரும் என கூறியுள்ள துரை வைகோ, மதவாத சக்திகளை தோற்கடிக்க இந்தியா முழுவதும் எதிர்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

தெலங்கானாவில் ராகுல் காந்தி மேற்கொண்ட நடைபயணத்தில் தான் கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்த போது, நாட்டில் தற்போது உள்ள சூழல் மற்றும் அவைகளை முறியடிக்க மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விவாதித்ததாக கூறினார்.



மாமனிதன் வைகோ ஆவணப்பட திரையிடும் நிகழ்ச்சியில் திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...