கோவை நல்லூர்வயல் அருகே சிறுத்தை தாக்கி பசு மாடு உயிரிழப்பு - விவசாயிகள் கோரிக்கை

கோவை தொண்டாமுத்தூர் நல்லூர்வயல் பகுதியில் தொடர்ச்சியாக கால்நடைகளை சிறுத்தை தாக்கிக் கொல்வதாகவும் உடனடியாக சிறுத்தை வருவதை தடுக்கும் பணியை வனத்துறையினர் விரைந்து எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.


கோவை: மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட தொண்டாமுத்தூர் அருகே நல்லூர்வயல் பகுதியில் கடந்த சில தினங்களாக சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தெரியவந்துள்ளது.

அந்த சிறுத்தையானது ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை தாக்கி கொன்று வருவதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று நல்லூர்வயல் பெருமாள்கோவில்பதி பகுதியை சேர்ந்த சண்முக சுந்தரம் என்பவருக்கு சொந்தமான பசு மாடுகள் தோட்டத்தின் அருகே மேய்ச்சலுக்கு சென்றது. அப்போது மேய்ச்சலுக்கு சென்ற பசு மாடுகளில் ஒரு மாடு மட்டும் வீடு திரும்பாத நிலையில் அப்பகுதியில் சென்ற பார்த்த போது பாசு மாடு உடல் முழுவதும் காயத்துடன் இறந்து கிடந்ததுள்ளது.

இதையடுத்து சண்முக சுந்தரம் மதுக்கரை வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் அங்கிருந்த கால் தடங்களை ஆய்வு செய்ததில் அது சிறுத்தையின் கால் தடம் என்பது தெரிந்துள்ளது.

மேலும் வனத்துறையினர் உயிரிழந்த பசு மாட்டிற்கு உடற்கூறு ஆய்வு செய்த கால்நடை மருத்துவர்களிடம் ஒப்படைத்தனர். இந்த சிறுத்தை நடமாட்டத்தை தொடர்ந்து வேட்டை தடுப்பு காவலர்கள் கண்காணித்து வருகின்றனர்.

இதனிடையே தொடர்ந்து கடந்த 3 மாதங்களில் 5க்கும் மேற்பட்ட கால்நடைகளை சிறுத்தை தாக்கிக் கொன்றதாகவும், உடனடியாக சிறுத்தை வருவதை தடுக்க வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...