உதகை அருகே நடைபெற்ற சிறப்பு மனுநீதி நாள் முகாமில் 213 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

குந்தா தாலுக்காவிற்குட்பட்ட பாலக்கொலா கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு மனுநீதி நாள் முகாமில் 213 பயனாளிகளுக்கு, 1.23 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் அம்ரித் வழங்கினார்.



நீலகிரி: உதகை அருகே உள்ள பாலக்கொலா கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் அம்ரித் தலைமையில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. அதில் 6 நபர்களுக்கு 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கான விபத்து நிவாரண உதவி தொகையும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 28 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகையான 1 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் பெறுவதற்கான ஆணையினை வழங்கினார்.



மேலும் 23 பயனாளிகளுக்கு 1.15 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய குடும்ப அட்டைகள், தோட்டக்கலைத்துறை சார்பில் 12 பயனாளிகளுக்கு 1.60 லட்சம் ரூபாய் மதிப்பில் மானியத்துடன் கூடிய நுண்ணீர் தெளிப்பான் மற்றும் மின்சார பேட்டரி மூலம் இயங்கும் தெளிப்பான்கள் வழங்கப்பட்டன.



மேலும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 81 பயனாளிகளுக்கு 56.70 லட்சம் ரூபாய் மதிப்பில் வீட்டுமனை பட்டா, மாவட்ட முன்னோடி வங்கியின் சார்பில் 10 பயனாளிகளுக்கு 37.72 லட்சம் ரூபாய் மதிப்பில் கடனுதவி வழங்கப்பட்டது.



மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் சார்பில் 2 பயனாளிகளுக்கு 12 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான உதவித்தொகை, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 4 சுய உதவிக்குழுக்களுக்கு 2 லட்சம் ரூபாய் மதிப்பில் கடன் உதவிகள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 4 பயனாளிகளுக்கு 18 ஆயிரம் ரூபாய் மதிப்பில் தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.



மேலும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு புதிய மருத்துவ காப்பீட்டு அட்டைகள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 6 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் சீருடைகள் ஆகியவற்றை ஆட்சியர் அம்ரித் வழங்கினார்.



கூட்டுறவு வங்கி சார்பில் 25 பயனாளிகளுக்கு 17.55 லட்சம் ரூபாய் மதிப்பில் கடனுதவி, வேளாண் பொறியியல் துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு தேயிலை பறிக்கும் இயந்திரங்கள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு மருந்து பெட்டகங்கள் என மொத்தம் 213 பயனாளிகளுக்கு 1.23 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...