கோவை மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் தங்கராஜ் சாம்பியன்


கோவை மாவட்ட கேரம் சங்கம் மற்றும் குறிச்சி நண்பர்கள் கேரம் சங்கம் இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டு போட்டிகள் கடந்த மூன்று தினங்களாக செங்கப்ப கோனார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.



இதில் ஒற்றையர் பிரிவில் 162 அணிகளும் இரட்டையர் பிரிவில் 56 அணிகளும் பங்கேற்றன. இதன் ஒற்றையர் பிரிவில் இறுதி ஆட்டத்தில் தமிழன் கேரம் பயிற்சி மையத்தை சேர்ந்த தங்கராஜ் தன்னை எதிர்த்து விளையாடிய தியாகி சின்னசாமி பயிற்சி மையத்தை சேர்ந்த சுந்தரை 25- 1, 25- 2 என்ற புள்ளியின் அடிப்படையில் தோற்கடித்து சாம்பியன் பட்டம் பெற்றார்.

இதேபோல் இரட்டையர் பிரிவில் சுந்தர், மருதாசல மூர்த்தி ஜோடி முதலிடம் பெற்றனர். ஜூனியர் பிரிவில் அகர்ஷ்ன் மூத்தோர் பிரிவில் தேவராஜ் ஆகியோர் முதலிடம் பெற்றனர்.

இதன் பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தொழில் அதிபர் அரிமா கருணாநிதி வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு பரிசுகளையும், கோப்பைகளையும் வழங்கினார்.

விழாவில் கோவை மாவட்ட கேரம் சங்கத்தின் சேர்மன் யுவராஜ், தலைவர் குணசேகரன், செயலாளர் தங்கக்குமார், காப்பாளர் பாஸ்கரன், துணை தலைவர்கள் ராமலிங்கம், பாலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மனைவி கலைச்செல்வி நாம் தமிழர் கட்சியில் இணைவு

வால்பாறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமியின் மனைவி கலைச்செல்வி, அதிமுக சார்பில் சட்டப் பேரவை தேர்தலில் போட்டிய...

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...