கோவை மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் தங்கராஜ் சாம்பியன்


கோவை மாவட்ட கேரம் சங்கம் மற்றும் குறிச்சி நண்பர்கள் கேரம் சங்கம் இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டு போட்டிகள் கடந்த மூன்று தினங்களாக செங்கப்ப கோனார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.



இதில் ஒற்றையர் பிரிவில் 162 அணிகளும் இரட்டையர் பிரிவில் 56 அணிகளும் பங்கேற்றன. இதன் ஒற்றையர் பிரிவில் இறுதி ஆட்டத்தில் தமிழன் கேரம் பயிற்சி மையத்தை சேர்ந்த தங்கராஜ் தன்னை எதிர்த்து விளையாடிய தியாகி சின்னசாமி பயிற்சி மையத்தை சேர்ந்த சுந்தரை 25- 1, 25- 2 என்ற புள்ளியின் அடிப்படையில் தோற்கடித்து சாம்பியன் பட்டம் பெற்றார்.

இதேபோல் இரட்டையர் பிரிவில் சுந்தர், மருதாசல மூர்த்தி ஜோடி முதலிடம் பெற்றனர். ஜூனியர் பிரிவில் அகர்ஷ்ன் மூத்தோர் பிரிவில் தேவராஜ் ஆகியோர் முதலிடம் பெற்றனர்.

இதன் பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தொழில் அதிபர் அரிமா கருணாநிதி வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு பரிசுகளையும், கோப்பைகளையும் வழங்கினார்.

விழாவில் கோவை மாவட்ட கேரம் சங்கத்தின் சேர்மன் யுவராஜ், தலைவர் குணசேகரன், செயலாளர் தங்கக்குமார், காப்பாளர் பாஸ்கரன், துணை தலைவர்கள் ராமலிங்கம், பாலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...