குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி கோவையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற'பேக்கத்தான்'

கோவையில் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி யங் இந்தியன்ஸ் அமைப்பு சார்பில் கோவை வா.வு.சி. பார்க் கேட் முன்பு நடத்தப்பட்ட பேக்கத்தான் நிகழ்வில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


கோவை: குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் 'யங் இந்தியன்ஸ்' அமைப்பின் கோவை கிளை சார்பில் நடைபெற்ற மாபெரும் ' பேக்கத்தான்' நிகழ்ச்சியை கோவை வா.வு.சி. பார்க் கேட் முன்பு மாவட்ட ஆட்சியர் சமீரன் துவக்கி வைத்தார்.



இந்த 'பேக்கத்தான்' நிகழ்வில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று பின்நோக்கி பேரணியாக குறிப்பிட்ட பாதையில் நடந்து சென்றனர். கோவையில் உள்ள 8 கல்லூரிகளின் யுவா கிளப் உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு, குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் சமீரன், குழந்தைகள் பாதுகாப்பு குறித்து நமது மாவட்டம் முழுவதிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கூறினார்.

நிகழ்ச்சியில் பேசிய யங் இந்தியன்ஸ் அமைப்பினர்,குழந்தைகளுக்கு பாலியல் சமந்தமான சீண்டல்களில் இருந்து மீண்டு வர, அவர்களுக்கு உதவ நமக்கு அதிகாரமோ பணமோ தேவையில்லை, சமூக புரிதலும் நல்ல மனமும் இருந்தாலே போதும் என கூறினர்.



குழந்தைகள் எதேனும் பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்தால் 1098 உதவி என்னை அழைத்தால் போதும், என்று கூறினர்.

குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பள்ளி, கல்லூரி மாணவர்கள் மாணவிகள் இடையேயும், பொது மக்களிடையேயும், ஆட்டோ ஓட்டுனர்கள், டாக்சி ஓட்டுனர்கள், பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் ஆகியோரிடம் யங் இந்தியன்ஸ் அமைப்பு எடுத்து சென்றுள்ளதாகவும் தெரிவித்தனர்.

குழந்தைகளிடம், பிறர் தங்களை தொடும் போது எது பாதுகாப்பானது, எது ஆபத்தானது என்பதை பற்றிய விழிப்பணர்வு கொண்டு சேர்க்கப்பட்டுள்ளதாகவும், அதே போல் பாலியல் தொல்லைக்கு ஆளான குழந்தைகளின் பெற்றோர்கள் இது சம்மந்தமாக அடுத்த கட்டமாக செய்ய வேண்டியவை என்ன என்கிற புரிதலை ஏற்படுத்தியுள்ளதாகவும் யங் இந்தியன்ஸ் அமைப்பினர் கூறியுள்ளனர்.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...